Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


4 வயது சிறுமி நரபலி? பெண் மந்திரவாதி கைது

Go down

4 வயது சிறுமி நரபலி? பெண் மந்திரவாதி கைது Empty 4 வயது சிறுமி நரபலி? பெண் மந்திரவாதி கைது

Post by oviya Sun Jan 04, 2015 11:04 am

திருச்சி மாவட்டத்தில் காணாமல் போன சிறுமி நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவெறும்பூர் அய்யனார் கோவிலைச் சேர்ந்தவர் முனியப்பன்- அமராவதி. கூலித்தொழில் செய்து வரும் இவர்களுக்கு ராகவி(7), இன்பரசி( 4) என இரண்டு பெண் குழந்தைகள்.
கடந்த 30 ஆம் திகதி மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இன்பரசி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் இன்பரசியை தேடி அலைந்துள்ளனர், ஆனால் இன்பரசி பற்றி ஒரு தகவலும் கிடைக்கவி்ல்லை.

இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் முனியப்பன் புகார் கொடுத்தார். இந்நிலையில் அய்யனார் கோவில் அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் இன்பரசி பிணமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்பரசி வசித்த அதே பகுதியில் ஒருவர் மாந்திரீகம், குறி சொல்லும் தொழில் செய்து வருகிறார். அந்நபர் குழந்தையை நரபலி கொடுத்திருக்கலாம் என இன்பரசியின் உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர்.

எனவே இதுகுறித்து உரிய விசாரணை வேண்டும் என இன்பரசியின் பெற்றோரும், உறவினர்களும் உடலை வைத்துக் கொண்டு திருவெறும்பூர்– தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மந்திரவாதி தனம் சில வருடங்களுக்கு முன் அதே பகுதியில் 3 குழந்தைகளை கடத்தி வந்து சத்திரம் பகுதியில் ஒளித்து வைத்திருந்தார்.

பின்னர், அருள்வாக்கு என்ற பெயரில் அந்த குழந்தைகள் இருக்கும் இடத்தை கூறி அவர்களது பெற்றோரிடம் பணம் பறித்தார்.

கடத்தப்பட்ட குழந்தைகள், தனம் தான் தங்களை கடத்தி வைத்திருந்தார் என கூறியதால் குட்டு அம்பலமானது. இதுபோலதான், இன்பரசியின் பெற்றோரிடம் பணம் பறிக்க அவளை கடத்தி நரபலி கொடுத்திருப்பார் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே இன்பரசியின் உடல் திருச்சி தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அறிக்கையில், தண்ணீர் அதிகமாக குடித்து குழந்தை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்பரசி குவாரி தண்ணீர் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.

இதற்கிடையே பெண் மந்திரவாதி தனத்தை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum