Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வவுனியாவில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுவன்: 18 வயது இளைஞன் கைது

Go down

வவுனியாவில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுவன்: 18 வயது இளைஞன் கைது Empty வவுனியாவில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுவன்: 18 வயது இளைஞன் கைது

Post by oviya Tue May 05, 2015 2:43 pm

வவுனியாவில் 10 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை நேற்று கைது செய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் சஞ்சய் என்ற 10 வயது சிறுவன் பகல் வேளையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

கொலை இடம்பெற்றவேளை சிறுவன் மாத்திரமே வீட்டில் தனியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை நடாத்தி வந்தனர்.

இந்தநிலையில் இக் கொலையுடன் தொடர்புடையவர் என கொல்லப்பட்ட சிறுவனின் உறவினரான 18 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த இளைஞர் சிறுவனின் வீட்டின் அருகிலேயே வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனின் வீட்டில் இருந்த உண்டியலில் பணத்தை திருடச் சென்றவேளை குறித்த இளைஞன் இந்தக் கொலையைச் செய்துள்ளார்.

தான் திருடியதைக் கண்ட சிறுவன் வீட்டாரிடம் சொல்லப் போவதாக கூறியதையடுத்து, அருகில் இருந்த கத்தியை எடுத்து சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக இளைஞன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum