Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கைவிட்ட உலகநாடுகள்…காப்பாற்றிய இந்தியா: அரியவகை கல்லீரல் அறுவை சிகிச்சை

Go down

கைவிட்ட உலகநாடுகள்…காப்பாற்றிய இந்தியா: அரியவகை கல்லீரல் அறுவை சிகிச்சை Empty கைவிட்ட உலகநாடுகள்…காப்பாற்றிய இந்தியா: அரியவகை கல்லீரல் அறுவை சிகிச்சை

Post by oviya Fri Mar 13, 2015 1:49 pm

நைஜீரியாவை சேர்ந்த ஜார்ஜ் இகுஜே ஒபோ (George eguje oboo)என்ற நபருக்கு, இந்தியாவில் கல்லீரல் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
நைஜீரியாவைச் சேர்ந்த ஜார்ஜ் இகுஜே ஒபே என்பவர் கடந்த 2003-ம் ஆண்டு ‘பட் சியாரி சிண்ட்ரோம்’ (Budd Chiari syndrome) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார்.

இந்த நோய் தாக்கியவர்களுக்கு கல்லீரலில் உள்ள ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு கல்லீரல் வீங்கத் தொடங்கும்.

மனித கல்லீரலின் சராசரி எடையே 1.5 கிலோவாக இருக்கும் நிலையில், ஜார்ஜின் கல்லீரலோ 4.5 கிலோ எடையுடன் நன்கு வீங்கிய நிலையில் இருந்ததால், அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் நரக வேதனையை அனுபவித்து வந்தார்.

தனது நோய் குணமாக அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு சிகிச்சைக்காக சென்று ஏமாற்றத்துடனே திரும்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம் இங்கிலாந்து சென்ற ஜார்ஜூக்கு, அங்கு நடந்த பரிசோதனையின் போதுதான், கல்லீரலிலிருந்து இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ‘ஐவிசி’ என்ற ரத்த நாளம் முழுவதுமாக அடைபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

எனவே புதிய கல்லீரலைப் பொருத்தினாலும் ரத்த நாளத்தில் உள்ள அடைப்பை நீக்க முடியாது என்று கூறி அவரை திருப்பி அனுப்பி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள போர்டிஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.

சில மருத்துவ நடைமுறைகளுக்குப் பின்னர் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 8 அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர் உட்பட 14 மருத்துவர்கள் இணைந்து சிகிச்சையை தொடங்கினர்.

முதலில் ஜார்ஜின் சகோதரரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரலை அவருக்குப் பொருத்தினர், இது கொஞ்சம் ஆபத்தான சிகிச்சை தான் என்றாலும், துல்லியமாக நடத்தப்பட்ட இந்த அரிய வகை கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றியடைந்தது.

இதுபோன்ற அறுவை சிகிச்சை உலகிலேயே இதுவரை 4 பேருக்கு மட்டுமே நடைபெற்றுள்ளது. இது இந்தியாவின் முதல் அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum