Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


25 அடி ஆழமுள்ள குளத்தில் தவறி விழுந்த சிறுமி: உயிரை காப்பாற்றிய வீரச்சிறுவன்

Go down

25 அடி ஆழமுள்ள குளத்தில் தவறி விழுந்த சிறுமி: உயிரை காப்பாற்றிய வீரச்சிறுவன் Empty 25 அடி ஆழமுள்ள குளத்தில் தவறி விழுந்த சிறுமி: உயிரை காப்பாற்றிய வீரச்சிறுவன்

Post by oviya Wed Apr 29, 2015 12:41 pm

மும்பையில் சிறுவன் ஒருவன் 25 அடி ஆழமுள்ள குளத்தில் மூழ்கிய 10 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றி பலரது பாராட்டையும் பெற்றுள்ளான்.
மும்பையில் உள்ள மலபார் ஹில் பகுதியில் உள்ள பங்கங்கா குளக்கரையில் விளையாடி கொண்டிருந்த கிருஷ்ணா என்ற 10 வயது சிறுமி திடீரென குளத்துக்குள் தவறி விழுந்துவிட்டாள்.

இதையடுத்து அவளுடன் விளையாடி கொண்டிருந்த மற்றொரு சிறுமி அப்பகுதியில் இருந்தவர்களிடம் அழுதுகொண்டே நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

அந்த குளத்தில் 25 அடி தண்ணீர் இருந்த நிலையில், சிறுமி கிருஷ்ணாவை காப்பாற்ற 20க்கும் மேற்பட்டோர் குளத்துக்குள் பாய்ந்துள்ளனர்.

அவர்களில் மோஹித் தால்வி என்ற 14 வயது சிறுவனும் குதித்துள்ளான்.

எப்படியாவது சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த சிறுவன், இரண்டு முறை தண்ணீருக்குள் மூழ்கி தேடிய போதும் கிருஷ்ணா அகப்படவில்லை.

பின்னர் மூன்றாவது முறையாக தண்ணீருக்குள் சென்ற மோஹித், குளத்தின் அடி ஆழத்தில் கிருஷ்ணாவின் கையை கண்ட உடனே பிடித்து மேலே இழுத்து வந்துள்ளான்.

இதை தொடர்ந்து கிருஷ்ணாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்றியுள்ளனர்.

கிருஷ்ணாவின் தந்தை அனில் பாஷ்ட்யே கூறுகையில், எனது மகளை உயிருடன் மீட்டுத் தந்த மோஹித்துக்கு என்றும் நன்றி உடையவனாக இருப்பேன்.

எனது மகள் இன்னும் ஒரு நிமிடம் அதிகமாக தண்ணீருக்குள் இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்க மாட்டாள் என மருத்துவர்கள் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.

சிறுமி கிருஷ்ணாவை காப்பாற்றிய வீரச்சிறுவன் மோஹித்தை பலரும் பாராட்டியுள்ளனர்.

மேலும், மருத்துவர்களும், அரசியல்வாதிகளும் சிறுவனுக்கு வெகுமதி வழங்கி சிறப்பித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum