Top posting users this month
No user |
Similar topics
25 அடி ஆழமுள்ள குளத்தில் தவறி விழுந்த சிறுமி: உயிரை காப்பாற்றிய வீரச்சிறுவன்
Page 1 of 1
25 அடி ஆழமுள்ள குளத்தில் தவறி விழுந்த சிறுமி: உயிரை காப்பாற்றிய வீரச்சிறுவன்
மும்பையில் சிறுவன் ஒருவன் 25 அடி ஆழமுள்ள குளத்தில் மூழ்கிய 10 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றி பலரது பாராட்டையும் பெற்றுள்ளான்.
மும்பையில் உள்ள மலபார் ஹில் பகுதியில் உள்ள பங்கங்கா குளக்கரையில் விளையாடி கொண்டிருந்த கிருஷ்ணா என்ற 10 வயது சிறுமி திடீரென குளத்துக்குள் தவறி விழுந்துவிட்டாள்.
இதையடுத்து அவளுடன் விளையாடி கொண்டிருந்த மற்றொரு சிறுமி அப்பகுதியில் இருந்தவர்களிடம் அழுதுகொண்டே நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
அந்த குளத்தில் 25 அடி தண்ணீர் இருந்த நிலையில், சிறுமி கிருஷ்ணாவை காப்பாற்ற 20க்கும் மேற்பட்டோர் குளத்துக்குள் பாய்ந்துள்ளனர்.
அவர்களில் மோஹித் தால்வி என்ற 14 வயது சிறுவனும் குதித்துள்ளான்.
எப்படியாவது சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த சிறுவன், இரண்டு முறை தண்ணீருக்குள் மூழ்கி தேடிய போதும் கிருஷ்ணா அகப்படவில்லை.
பின்னர் மூன்றாவது முறையாக தண்ணீருக்குள் சென்ற மோஹித், குளத்தின் அடி ஆழத்தில் கிருஷ்ணாவின் கையை கண்ட உடனே பிடித்து மேலே இழுத்து வந்துள்ளான்.
இதை தொடர்ந்து கிருஷ்ணாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்றியுள்ளனர்.
கிருஷ்ணாவின் தந்தை அனில் பாஷ்ட்யே கூறுகையில், எனது மகளை உயிருடன் மீட்டுத் தந்த மோஹித்துக்கு என்றும் நன்றி உடையவனாக இருப்பேன்.
எனது மகள் இன்னும் ஒரு நிமிடம் அதிகமாக தண்ணீருக்குள் இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்க மாட்டாள் என மருத்துவர்கள் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.
சிறுமி கிருஷ்ணாவை காப்பாற்றிய வீரச்சிறுவன் மோஹித்தை பலரும் பாராட்டியுள்ளனர்.
மேலும், மருத்துவர்களும், அரசியல்வாதிகளும் சிறுவனுக்கு வெகுமதி வழங்கி சிறப்பித்துள்ளனர்.
மும்பையில் உள்ள மலபார் ஹில் பகுதியில் உள்ள பங்கங்கா குளக்கரையில் விளையாடி கொண்டிருந்த கிருஷ்ணா என்ற 10 வயது சிறுமி திடீரென குளத்துக்குள் தவறி விழுந்துவிட்டாள்.
இதையடுத்து அவளுடன் விளையாடி கொண்டிருந்த மற்றொரு சிறுமி அப்பகுதியில் இருந்தவர்களிடம் அழுதுகொண்டே நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
அந்த குளத்தில் 25 அடி தண்ணீர் இருந்த நிலையில், சிறுமி கிருஷ்ணாவை காப்பாற்ற 20க்கும் மேற்பட்டோர் குளத்துக்குள் பாய்ந்துள்ளனர்.
அவர்களில் மோஹித் தால்வி என்ற 14 வயது சிறுவனும் குதித்துள்ளான்.
எப்படியாவது சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த சிறுவன், இரண்டு முறை தண்ணீருக்குள் மூழ்கி தேடிய போதும் கிருஷ்ணா அகப்படவில்லை.
பின்னர் மூன்றாவது முறையாக தண்ணீருக்குள் சென்ற மோஹித், குளத்தின் அடி ஆழத்தில் கிருஷ்ணாவின் கையை கண்ட உடனே பிடித்து மேலே இழுத்து வந்துள்ளான்.
இதை தொடர்ந்து கிருஷ்ணாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்றியுள்ளனர்.
கிருஷ்ணாவின் தந்தை அனில் பாஷ்ட்யே கூறுகையில், எனது மகளை உயிருடன் மீட்டுத் தந்த மோஹித்துக்கு என்றும் நன்றி உடையவனாக இருப்பேன்.
எனது மகள் இன்னும் ஒரு நிமிடம் அதிகமாக தண்ணீருக்குள் இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்க மாட்டாள் என மருத்துவர்கள் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.
சிறுமி கிருஷ்ணாவை காப்பாற்றிய வீரச்சிறுவன் மோஹித்தை பலரும் பாராட்டியுள்ளனர்.
மேலும், மருத்துவர்களும், அரசியல்வாதிகளும் சிறுவனுக்கு வெகுமதி வழங்கி சிறப்பித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 5 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய மூளைச் சாவடைந்த 3 வயது சிறுமி
» ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர்..உயிரை காப்பாற்றிய பொலிஸ்: வைரலாய் பரவும் வீடியோ
» சாலையில் அடிபட்டு கிடந்தவரின் உயிரை காப்பாற்றிய நடிகர் சரத்குமார்
» ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர்..உயிரை காப்பாற்றிய பொலிஸ்: வைரலாய் பரவும் வீடியோ
» சாலையில் அடிபட்டு கிடந்தவரின் உயிரை காப்பாற்றிய நடிகர் சரத்குமார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum