Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கருணை உள்ளமே கடவுள் இல்லமே!

Go down

கருணை உள்ளமே கடவுள் இல்லமே! Empty கருணை உள்ளமே கடவுள் இல்லமே!

Post by abirami Sat Mar 21, 2015 8:57 pm

கருணை உள்ளமே கடவுள் இல்லமே! Large_124349369



* உலகம் முழுவதையும் அன்பினால் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். இந்த உலகில் யாரும் உங்களுக்கு அந்நியமானவர் அல்ல.
* நம்பிக்கையும், உறுதியுமே வாழ்வின் அடிப்படை. இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாம் இருப்பதற்குச் சமம் தான்.
* யாராவது ஒருவருக்கு மனமகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால், உன் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டது என்று பொருள்.
* கடவுளை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடவுளை நேசிப்பவன் எவனோ அவனே புண்ணியவான்.
* சோம்பலால் உடல் மட்டுமில்லாமல் மனமும் கெட்டு விடுகிறது. சோம்பலைப் புறக்கணித்து விட்டு ஆற்று வெள்ளம் எப்போதும்
ஓடிக் கொண்டிருப்பது போல சுறுசுறுப்புடன் இயங்குங்கள்.
* கருணை என்பதே இல்லாத ஒருவனை மனிதன் என்று அழைக்க முடியாது. இரக்கமிக்க கருணை உள்ளத்திலேயே கடவுள் குடியிருப்பார்.
* தவறுவது மனித இயல்பு. அதைப் பெரிதாக எண்ண வேண்டியதில்லை. நடந்ததையே மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தால் துன்பம் தான் உண்டாகும்.
* செல்வந்தன் பணத்தின் மூலமும், ஏழை இறைவனின் நாமத்தை உச்சரிப்பதன் மூலமும் தொண்டு செய்ய வேண்டும்.
* மனமே எல்லாமுமாக இருக்கிறது. மனம் தூய்மையானால் அன்றி எந்த நன்மையும் உண்டாகாது.
* துன்பம் வந்த காலத்தில் மட்டும் கடவுளை மக்கள் தேடுகின்றனர். ஆனால், இளமையிலேயே கடவுளைத் தேடுபவனே பேறு பெற்றவன்.
* மனதில் ஆசைகள் குறையும் அளவிற்கு ஒருவனுக்கு அமைதியும், நிம்மதியும் உண்டாகும்.
* கடவுளைக் காண்பதும், எப்போதும் அவன் நினைவில் மூழ்கிக் கிடப்பதுமே நம் வாழ்வின் லட்சியமாகும்.
* நீங்கள் ஒரு பொருளை மதித்தால் அதுவும் உங்களை மதிக்கும். அதனால், அற்பமானது என்று எதையும் இழிவாக நினைக்காதீர்கள்.
* கடவுளிடம் கண்ணீர் விட்டு அழுது விடுங்கள். இதனால், மன அழுக்கும், துன்பமும் குறைந்து விடும்.
* சந்தனத்தைத் தொட்ட கை மணப்பது போல, கடவுளைத் தியானித்தால் மனமும் கடவுள் மயமாகி, எங்கும் நறுமணம் பரவும்.
* சுடும் வார்த்தைகளைப் பேசுவதால், ஒருவரது சுபாவமே கொடுமையாக மாறுகிறது. அநாவசியமாகவோ, பிறர் விரும்பாதவற்றையோ பேசுதல் கூடாது.
* மனிதன் மரணத்தைக் கண்டு அழுகிறான். ஆனால், மகானோ சிரிக்கிறான். இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடு இது தான்.
* துன்பத்தைக் கண்டு துவளாதீர்கள். அவை நீடித்திருப்பதில்லை. பாலத்தின் அடியில் ஓடும் நீரைப் போல, அவை ஓடி மறைந்து விடும்.
* விலை கொடுத்து வாங்க கடவுள் காய்கறி அல்ல. நேர்மை, சத்தியம், அன்பு இவையே கடவுளுக்கு பிடித்தமானவை. கடவுளை சரண் அடைந்தால், அளவற்ற கருணையை நம் மீது பொழிவார்.
* மன அமைதியை விரும்பினால், பிறர் மீது குற்றம் சுமத்தாதீர்கள். மாறாக எப்போதும் உங்கள் குறைகளை எண்ணிப் பாருங்கள்.
* நற்செயல்களைச் செய்ய, காலத்தை எதிர்நோக்கி காத்திருக்க கூடாது. வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் நற்செயல்களில் ஈடுபடுங்கள்.

உற்சாகப்படுத்துகிறார் சாரதாதேவியார்


abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum