Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எனது மகளை கொன்றுவிட்டனர்: அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு தந்தை கடிதம்

Go down

எனது மகளை கொன்றுவிட்டனர்: அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு தந்தை கடிதம் Empty எனது மகளை கொன்றுவிட்டனர்: அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு தந்தை கடிதம்

Post by oviya Wed Feb 04, 2015 1:39 pm

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொல்கத்தாவில் தற்கொலை செய்து கொண்ட மாணவி கமலிகாவின் தந்தை நீதிகேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த கமலிகா தாஸ் (17) என்பவர் வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் அவர் இந்தி வீட்டுப்பாடம் செய்ய மறுந்துவிட்டதால் தனது சகமாணவன் ஒருவரின் வீட்டுப்பாட புத்தகத்தை கடன் வாங்கி அதில் தனது பெயரையும் வீட்டுப்பாடத்தையும் எழுதி சமர்பித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 19ம் திகதி அந்த மாணவர் அதே புத்தகத்தை ஆசிரியையிடம் சமர்பித்தபோது அதில் கமலிகாவின் பெயர் இருந்ததால் நடந்ததை ஆசிரியர் புரிந்து கொண்டுள்ளார்.

எனவே மறுநாள் கமலிகாவின் தாயை பள்ளிக்கு வரவழைத்து பேசியுள்ளனர். அவரிடம் உங்களின் மகளின் நடத்தை சரியில்லை என்று தெரிவித்ததால் மனமுடைந்த கமலிகா 7 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து அவரின் தந்தை கிஷோலோய் தாஸ் கூறுகையில், என் மனைவி முன்பு என் மகளை நடத்தை கெட்டவள் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் மகள் சக மாணவன் மீது கொடுத்த பாலியல் புகாரில், அந்த மாணவனின் தவறு அல்ல, உங்கள் மகளின் தவறு தான் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இறப்பதற்கு முன்பு கமலிகா தனது டைரியில் பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு எழுதிய கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து கடந்த 24ம் திகதி கமலிகாவின் மரணத்திற்கு அவரின் பள்ளி தலைமையை ஆசிரியை ஸ்னிக்தா தேப், இந்தி ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் தான் காரணம் என்று கூறி அவரது பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

மேலும், கமலிகாவின் தந்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு நீதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum