Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


12 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை: சாகும் வரை கடுங்காவல் தண்டனை

Go down

12 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை: சாகும் வரை கடுங்காவல் தண்டனை Empty 12 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை: சாகும் வரை கடுங்காவல் தண்டனை

Post by oviya Tue Feb 03, 2015 1:08 pm

கேரளாவில் தந்தை ஒருவர் தனது 12 வயது மகளை 3 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து, கர்ப்பிணியாக்கியதற்காக கொல்லம் நீதிமன்றம் சாகும்வரை கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கொல்லம் அருகே அரைக்கல் பகுதியை சேர்ந்த பொடிமோன் (40) என்பவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2010ல் பொடிமோனின் மனைவி கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதால் 3 மகள்களையும் அருகில் உள்ள அனாதை ஆசிரமத்தில் சேர்த்துள்ளார்.

தனது 12 வயதான மூத்த மகளை வாரத்திற்கு ஒரு முறை தனது வீட்டிற்கு பொடிமோன் அழைத்து வந்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு ஆசிரமத்தில் இருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்ததால் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்தவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததையடுத்து இதுகுறித்து கொல்லம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

பின்னர் பொலிசார் நடத்திய விசாரணையில் பொடிமோன், 3 ஆண்டுகளாக தனது மூத்த மகளை பலாத்காரம் செய்தது தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொல்லம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்மேனன், மகளை பலாத்காரம் செய்த பொடிமோனுக்கு சாகும் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum