Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐ.தே.க முக்கியஸ்தர்களின் ஊழல் மோசடிகளை கண்டறிய சுதந்திரக் கட்சி விசேட குழு அமைப்பு

Go down

ஐ.தே.க முக்கியஸ்தர்களின் ஊழல் மோசடிகளை கண்டறிய சுதந்திரக் கட்சி விசேட குழு அமைப்பு Empty ஐ.தே.க முக்கியஸ்தர்களின் ஊழல் மோசடிகளை கண்டறிய சுதந்திரக் கட்சி விசேட குழு அமைப்பு

Post by oviya Tue Feb 10, 2015 1:11 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் கண்டறிய விசேட குழுவொன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நியமித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள்.

2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட உள்ளது.

பத்து பேர் அடங்கிய நாடாளுமன்றக் குழுவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக கிரமமான அடிப்படையில் கையூட்டல் மற்றும் ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.

நாடாளுமன்றக் குழுவினர் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் பத்து ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக இந்த வாரத்தில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.

அதற்கான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, கோப் குழுவில் அங்கம் வகித்த காலத்தில் கண்டறிந்து கொண்டு வெளிப்படுத்திய தகவல்களை ஆதாரமாகக் கொண்டு இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த காலத்தில் கோப் குழுவின் உறுப்பினராக விசாரணை நடத்தி, நாடாளுமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ.சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.தே.க வையும் இணைப்போம்: ஜனாதிபதி

இரு கட்சி ஆதரவாளர்கள் தமக்கிடையில் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளும் யுகம் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.


ஜனாதிபதி தேர்தலின் போது அனைத்து கட்சிகளினதும் ஆதரவு கிடைத்தது. அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவத்தை வழங்கியது.

சிலநாட்களில் சிறிலங்கா சுதந்திர கட்சி என்னை தலைவராக ஏற்றுக்கொண்டது. எனவே, அனைவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

இதே வேளை கடந்த காலங்களில் இடம் பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆராய விசேட ஆணைக்குழுவொன்று நியமித்துள்ளதாக அரலங்வில பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum