Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு: நிதியமைச்சர்

Go down

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு: நிதியமைச்சர் Empty இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு: நிதியமைச்சர்

Post by oviya Fri Jan 23, 2015 1:59 pm

புதிய அரசாங்கம் எதிர்வரும் 29 ஆம் திகதி தாக்கல் செய்யும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வழங்கிய வாழ்க்கை செலவு கொடுப்பனவும் அதிகரிப்பு இதனுடன் இணைத்து அரச துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் ஜூன் மாதம் மேலும் 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும். எவ்வாறாயினும் தனியார் துறை ஊழியர்களுக்கு இந்த ஊதிய அதிகரிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இதனடிப்படையில் முதல் கட்டமாக 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்திருந்தார்.

புதிய அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கிறது

இலங்கையின் புதிய அரசாங்கம் எதிர்வரும் 29ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த வரவுசெலவுத்திட்டத்தில் அத்தியாவசிய 10 பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.

இதனை தவிர அரச பணியாளர்களின் சம்பளம் ஐயாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கான உறுதிமொழி கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum