Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சென்னையில் விமானம் இயக்கப்படுவதில் சிக்கல்! கட்டுப்பாட்டு அறைக்குள் மழை நீர்.. - கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் ரமணன்!

Go down

சென்னையில் விமானம் இயக்கப்படுவதில் சிக்கல்! கட்டுப்பாட்டு அறைக்குள் மழை நீர்.. - கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் ரமணன்! Empty சென்னையில் விமானம் இயக்கப்படுவதில் சிக்கல்! கட்டுப்பாட்டு அறைக்குள் மழை நீர்.. - கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் ரமணன்!

Post by oviya Sat Dec 05, 2015 1:17 pm


விமான நிலையத்தில் மின்சார கேபிள்கள் இருந்த கட்டுப்பாட்டு அறையில் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விமான சேவை தொடங்குவதில் சிக்கல் நீடித்து வருவதாக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரலாறு காணாத வடக்கிழக்கு பருவமழையின் காரணமாக வெள்ளத்தால் அண்மையில் சென்னை விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது.

இதையடுத்து சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் 6 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என்றும் அதுவரை அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளம் தற்காலிக பயணிகள் விமாண நிலையமாக செயல்படும் என்று இந்திய விமான ஆணையம் அறிவித்தது.

விமான நிலையத்தில் மின்சார கேபிள்கள் இருந்த கட்டுப்பாட்டு அறையில் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விமான சேவை தொடங்குவதில் சிக்கல் நீடித்து வருவதாக வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இதனிடையே வெள்ளத்தால் சென்னை விமானநிலையத்தில், கடந்த 4 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 விமானங்களும் டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இன்று அதிகாலை அனுப்பி வைக்கப்பட்டுள்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா “விமான நிலையத்தில் வெள்ளம் வடிய தொடங்கினாலும், உடனடியாக விமானத்தை இயக்க முடியாது என்றும் மின்சார கட்டுப்பாட்டு அறைக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் விமானம் இயக்கப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது என்றும் தேவைகள் முழுவதும் சீரான பிறகுதான் விமான சேவை தொடங்கும் அதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகலாம் ” என்றும் அவர் குறிப்பிட்டார்.



வெள்ளத்தில் நிறைய பாம்புகள் அடித்து வரப்பட்டு விமானங்களூக்குள் புகுந்து விட்டதால், பாதுகாப்பு நிலை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சென்னை விமான நிலையம் செயல் பட துவங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை விமான நிலையம் இன்று திறக்கப்படாது: மத்திய இணை அமைச்சர் மகேஷ் சர்மா

சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்க மேலும் இரண்டு நாட்களாகும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ததால் மீனம்பாக்கம் விமான நிலையத்தின் விமான ஓடுபாதையில் தண்ணீர் புகுந்தது. இதனால் கடந்த 2ம் தேதி முதல் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

டிசம்பர் 6ஆம் தேதி வரை அரக்கோணம் விமானப்படை தளத்தில் பயணிகள் விமானம் வந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தண்ணீர் குறைந்துள்ளதால் இன்று முதல் விமான சேவை துவங்கம் என்று எதிர்பார்க்கப்பட்டது.



தண்ணீர் குறைந்தாலும் மின்சார சேவை சீராக வினியோகிக்கப்படாத காரணத்தினால் விமான சேவை தொடங்க மேலும் இரண்டு நாட்கள் ஆகும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

ஓடுபாதையில் தண்ணீர் வடிந்த நிலையில், மின்வினியோகம் சரிசெய்யப்பட்ட பிறகு விமான போக்குவரத்து தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ். ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரமணன்:

“தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கன்னியாகுமரிக்கு அருகே நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

இதனால், வட கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். தென் கடலோர மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

அவ்வப்போது மிதமானது முதல் கன மழை பெய்யும்” என்று கூறினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum