Top posting users this month
No user |
கல்முனை மாநகர சபையின் வாகனம் விபத்து! ஆறு பேர் காயம்
Page 1 of 1
கல்முனை மாநகர சபையின் வாகனம் விபத்து! ஆறு பேர் காயம்
கல்முனை மாநகர சபையின் பிக்கப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சபையின் பிரதம கணக்காளர் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனம் கந்தளாய் பிரதான வீதி வளைவொன்றில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி குடைசாய்ந்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கணக்காளரும் சாரதியும் மேலும் நால்வரும் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அதேவேளை முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த கணக்காளர் படுகாயமடைந்துள்ளதால் அவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு- பின்னர் பேராதெனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் அவசர உத்தரவின் பேரில் ஆணையாளரின் ஜே.லியாகத் அலி, முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் மற்றும் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் ஆகியோர் ஸ்தலத்திற்கு விரைந்து சென்று தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
நேற்று கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனம் கந்தளாய் பிரதான வீதி வளைவொன்றில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி குடைசாய்ந்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கணக்காளரும் சாரதியும் மேலும் நால்வரும் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அதேவேளை முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த கணக்காளர் படுகாயமடைந்துள்ளதால் அவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு- பின்னர் பேராதெனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் அவசர உத்தரவின் பேரில் ஆணையாளரின் ஜே.லியாகத் அலி, முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் மற்றும் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் ஆகியோர் ஸ்தலத்திற்கு விரைந்து சென்று தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum