Top posting users this month
No user |
வவுனிக்குளம் கமக்கார அமைப்பினருடன் குறைகேள் சந்திப்பு
Page 1 of 1
வவுனிக்குளம் கமக்கார அமைப்பினருடன் குறைகேள் சந்திப்பு
முல்லைத்தீவு வவுனிக்குள நீர்ப்பாசன திணைக்கள அலுவலகத்தில் குறைகள் கேட்டு அறியும் சந்திப்பு ஒன்று நடைபெற்றறது குறைகேள் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட குறைகள் சில உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டன.
வன்னி மாவட்ட பா.உ திருமதி சாந்தி சிறீஸ்காந்தராசா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இச்சந்திப்பில் முல்லை மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் திரு.சிறீஸ்காந்தராசா நீர்ப்பாசன பொறியியலாளர் திரு.விகர்ணன் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் திரு.பிருந்தாகரன் மற்றும் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
கடந்த செவ்வாய்கிழமை அன்று முல்லைத்தீவு வவுனிக்குள எல்லைக்குட்பட்ட கமக்கார அமைப்பினரின் குறைகளை ஆராயும் பொருட்டு வவுனிக்குள பொறியியலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மேற்படி கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் தமது கிராமம் சார்பான நிர்ப்பாசன கால்வாய்கள், கைவிடப்பட்ட வயல் நிலங்கள், கழிவு நீர் வாய்க்கால், ஏற்று நீர்ப்பாசனம், தொடர்பான குறைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.
மேற்படி முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் குறைகளையும் உள்வாங்கிய பா.உ திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா அவை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியதோடு அவர்களுடைய குறைகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பLம் என்றார்.
இச்சந்திப்பில் தொடர்ந்து வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள விவசாய நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பா.உ அவர்கள் விளக்கமளித்ததுடன் அத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை வலியுறுத்தினார்.
வன்னி மாவட்ட பா.உ திருமதி சாந்தி சிறீஸ்காந்தராசா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இச்சந்திப்பில் முல்லை மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் திரு.சிறீஸ்காந்தராசா நீர்ப்பாசன பொறியியலாளர் திரு.விகர்ணன் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் திரு.பிருந்தாகரன் மற்றும் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
கடந்த செவ்வாய்கிழமை அன்று முல்லைத்தீவு வவுனிக்குள எல்லைக்குட்பட்ட கமக்கார அமைப்பினரின் குறைகளை ஆராயும் பொருட்டு வவுனிக்குள பொறியியலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மேற்படி கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் தமது கிராமம் சார்பான நிர்ப்பாசன கால்வாய்கள், கைவிடப்பட்ட வயல் நிலங்கள், கழிவு நீர் வாய்க்கால், ஏற்று நீர்ப்பாசனம், தொடர்பான குறைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.
மேற்படி முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் குறைகளையும் உள்வாங்கிய பா.உ திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா அவை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியதோடு அவர்களுடைய குறைகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பLம் என்றார்.
இச்சந்திப்பில் தொடர்ந்து வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள விவசாய நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பா.உ அவர்கள் விளக்கமளித்ததுடன் அத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை வலியுறுத்தினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum