Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வெள்ளவத்தையில் பஸ் விபத்து! 10 பேர் காயம்- மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

Go down

வெள்ளவத்தையில் பஸ் விபத்து! 10 பேர் காயம்- மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி Empty வெள்ளவத்தையில் பஸ் விபத்து! 10 பேர் காயம்- மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

Post by oviya Mon Dec 29, 2014 1:09 pm

வெள்ளவத்தையில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எல்பிட்டியிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸொன்றே வீதியை விட்டு விலகி, பாதுகாப்பு வேலியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சம்பவத்தின் போது பஸ்ஸின் முன்ஆ சனத்தில் அமர்ந்திருந்த எட்டுவயதான சிறுமி பஸ்ஸூக்குள் சிக்கினார்.

இதனையடுத்து அவரை, கொழும்பு தீயணைப்பு படையினர் காப்பாற்றி, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

குருணாகல் மாவட்டம் நாரம்மல, மாதம்பை வீதியின் பாரிகொட பிரதேசத்தில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 28 வயதுடைய குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான நபரும், நாரம்பல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான நபருமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum