Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 86 தமிழக மீனவர்கள் விடுதலை: முதல்வர் ஜெயலலிதா

Go down

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 86 தமிழக மீனவர்கள் விடுதலை: முதல்வர் ஜெயலலிதா Empty இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 86 தமிழக மீனவர்கள் விடுதலை: முதல்வர் ஜெயலலிதா

Post by oviya Mon Oct 26, 2015 1:36 pm

இலங்கை கடற்படையால் சிறையில் அடைக்கப்பட்ட 86 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படும் நிலையில், அவர்களை தமிழகம் அழைத்துவரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதை நிறுத்தக் கோரியும், கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா இதுவரை 73 கடிதங்களை எழுதியுள்ளார்.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய பாரம்பரிய பாக் வளைகுடா, மன்னார் வளைகுடா கடல்பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடந்த செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 14ம் திகதி வரை இலங்கைக் கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகி இலங்கை சிறைகளில் 86 மீனவர்கள் அடைக்கப்பட்டனர்.

இதையறிந்து செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 14 வரை 7 கடிதங்கள் மூலம் தமிழக மீனவர்களின் கைது குறித்து பிரதமரின் கவனத்துக்கு முதல்வர் கொண்டு சென்றார்.

இலங்கைச் சிறைகளில் வாடும் அப்பாவி மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக இலங்கைச் சிறைகளில் வாடும் 86 மீனவர்கள் அக்டோபர் 28ம் திகதி இலங்கை அரசால் விடுவிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, தமிழக சிறையில் உள்ள இரண்டு இலங்கை மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் அக்டோபர் 28ம் திகதி விடுவிக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum