Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தவறிழைத்தவர்களை தண்டனையில் இருந்து தப்புவிக்க கூடாது: யஸ்மின் சூகா

Go down

தவறிழைத்தவர்களை தண்டனையில் இருந்து தப்புவிக்க கூடாது: யஸ்மின் சூகா  Empty தவறிழைத்தவர்களை தண்டனையில் இருந்து தப்புவிக்க கூடாது: யஸ்மின் சூகா

Post by oviya Fri Sep 18, 2015 2:48 pm

இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்றவைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என அனைத்துலக மனித உரிமைகள் நிபுணர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் உரையாற்றும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



திரளான மக்கள் மடிந்துள்ளனர், போர்க்குற்றங்கள், மனித உரிமைகளுக்கெதிரான அச்சுறுத்தல்கள் என நிகழ்ந்துள்ளன, ஆனாலும் அவையாவும் இன்னமும் தொடர்கின்றன.

இவையாவும் பாதிக்கப்பட்டவர்களின் இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தால் மட்டுமே முடிவானதும் சாதகமானதுமான தீர்வினை பெறமுடியும்.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை என்பது இந்த விவகாரத்தில் முதற்படியே.

சர்வதேச அளவில் நிபுணர்கள் அடங்கிய பல்வேறு குழுவினர் இந்த விவகாரத்தை முக்கியமானதாக கருதி செயல்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விசாரணைக்கு அங்கு அமைந்துள்ள புதிய அரசு நடவடிக்கை எடுக்கும் என மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக முக்கியமானதாக கருதப்படுவது தேசிய தலத்தில் ஒட்டுமொத்த கலந்தாலோசனையே

ஆனால் இந்த தேசிய அளவிலான கலந்தாலோசனையில் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள் பிரதிபலிக்குமா? பாதிக்கப்பட்டவர்கள், ஒன்றுமல்லாமல் சிதைக்கப்பட்டவர் என இலங்கையின் ஒட்டுமொத்த பொதுமக்களின் பங்களிப்பு இருக்குமா?

மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்துவதற்கென இலங்கையில் பல்வேறு அமைப்புகளை அமைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவை அனைத்துமே வரலாற்றுப் பிழை அன்றி வேறில்லை.

அடுத்ததாக அனைவருக்கும் எழும் கேள்வி என்பது பாதுகாப்பு சீரமைப்பு குறித்துதான்.

மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் மட்டுமல்ல பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டுவது கெட்டுப்போன சிலர் குறித்து அல்ல.

இங்கு நாம் சுட்டிக்காட்டுவது பொலிஸ் அல்லது இராணுவ வீரர்கள் களங்கமடைந்திருப்பதாக அல்ல, தவறிழைத்தவர்களை தண்டனையில் இருந்து தப்புவிக்க கூடாது என்பதே.

பாதுகாப்புத்துறையில் சரியான சீர்திருத்தம் அமைந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அது பலனை அளிக்கும்,

வெளிவந்துள்ள அறிக்கையில் விடுபட்டுள்ள முக்கியமான கருத்து மிரட்டல்களால் உடமையை அபகரித்தல். அதுகுறித்து பல ஆண்டுகளாக நாங்கள் உழைத்து வருகின்றோம்.

மிரட்டல்களால் உடமையை அபகரிப்பது அல்லது பணம் பறிப்பது என்பது முகியமான பணிகளில் ஒன்றாக உள்ளது.

உயிர் பிழைத்து தப்பிக்க வேண்டும் எனில் பணம் தரவேண்டிய கட்டாயம் உள்ளது, இதுபோன்ற முறைகேடுகளை இலங்கையில் இருந்து மொத்தமாக ஒழிக்க வேண்டும்.

பாதுகாப்புத்துறையின் சீரமைப்பினால் மட்டுமே இதுபோன்ற முக்கிய விடயங்கள் சாத்தியமாகும்.

சாட்சியம் அளிப்பவர்களை பாதுகாப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சாட்சியம் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பை நாம் உறுதி செய்யவில்லை எனில் அவர்களின் குரல்களை நாம் உதாசீனம் செய்வதேயாகும்.

நம்பிக்கை என்பது இலங்கையில் முக்கியமான விடயமாக உள்ளது. பல்வேறு மதத்தினருக்கிடையே இருக்கும் நம்பிக்கையல்ல, மாறாக அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான நம்பிக்கை.

மக்களிடம் அரசின் மீதான நம்பிக்கை மீள்கொணர்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

சர்வதேச அமைப்புகளாலான நீதிமன்றம் குறித்து மனித உரிமை ஆணையர் குறிப்பிட்டார், ஆனால் அதற்கும் இலங்கை அரசு கட்டுப்பாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் நிபுணர்களை கொண்ட ஒரு அமைப்பையே பரிந்துரைத்திருக்கிறது மனித உரிமைகள் ஆணையம்.

பல்வேறு காரணங்களால் இலங்கையில் பாதிப்புக்குள்ளான மக்கள் அங்குள்ள விசாரணை அமைப்புகளை நம்ப தயாராக இல்லை.

மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டது போன்று இலங்கை அரசு இதுவரை நடைமுறைப்படுத்தியுள்ள விடயங்கள் குறித்து சர்வதேச சமூகத்தோடு பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும். அதுவரையில் நமக்கு அங்குள்ள மூன்னேற்றம் குறித்து மதிப்பிட முடியாமல் போகும்.

இதுவரையான அறிக்கைகளில் நமக்கு தற்போது கிடைத்திருப்பது மிக முக்கியமான அறிக்கை, மட்டுமின்றி மிக முக்கியமான பரிந்துரைகளும் கூட.
மிக முக்கியமாக ஒடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்டவர்களின் குரல்கள் சர்வதேச சமூகத்தின் முன்பு கேட்கப்பட வேண்டும் என்பதே என தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum