Top posting users this month
No user |
Similar topics
குவைத்தில் வேலைக்கு சென்ற இளைஞர்கள் ஒட்டகம் மேய்க்கும் அவலம்: WhatsApp வீடியோவால் பரபரப்பு
Page 1 of 1
குவைத்தில் வேலைக்கு சென்ற இளைஞர்கள் ஒட்டகம் மேய்க்கும் அவலம்: WhatsApp வீடியோவால் பரபரப்பு
தமிழகத்தில் இருந்து டிரைவர் வேலைக்காக குவைத் செல்லும் இளைஞர்கள் ஒட்டகம் மேய்க்கும் கொத்தடிமையாக நடத்தப்படுவதாக ‘வாட்ஸ் அப்பில் வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கம்பம் தாத்தப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த இமாம்ஷா மகன் சதாம் உசேன் (26). இவருக்கு ஜாஸ்மின் பானு என்ற மனைவியும் நசுரீன், ஷர்கான் ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.
சதாம் உசேன், கடந்த 3 மாதங்களுக்கு முன் கும்பகோணத்தைச் சேர்ந்த காஜா என்பவர் மூலம், மாதம் ரூ.23,000 சம்பளத்துக்கு குவைத்தில் ஓட்டுநர் வேலைக்குச் சென்றுள்ளார்.
ஆனால் அங்கு அவரது பாஸ்போர்டை பிடிங்கி வைத்துகொண்டு ஒட்டகம் மேய்க்க அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சதாம் உசேன் அப்பணியை செய்ய முடியாது என மறுத்தபோது, அவரை மிரட்டி ஒட்டகங்களை மேய்க்கும் வேலையில் ஈடுபடுத்தி உள்ளனர்.
மேலும் கடந்த 3 மாதங்களாக அவருக்கு ஊதியம் மற்றும் சாப்பாடு சரிவர வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. பெற்றோர், உறவினர்களிடம் பேசவும் அவரை அனுமதிக்கவில்லை.
இதனால் அச்சமடைந்த சதாம் உசேன், அங்குள்ள ஒருவரது கைபேசியை வாங்கி, குவைத்தில் ஒட்டகம் மேய்க்கும் தனது பரிதாப நிலை குறித்து வீடியோ எடுத்து தன்னை எப்படியாவது காப்பாற்றும்படி தமிழகத்தில் உள்ள தனது நண்பர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரது உத்தரவால் போலிசார் நேற்று தீவிர விசாரணை நடத்தி சதாம் உசேனின் மனைவி மற்றும் பெற்றோர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து கம்பம் வடக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா கூறியதாவது, சதாம் உசேனை ஓரிரு நாளில் தமிழகம் அழைத்து வர மாவட்டக் காவல் கண் காணிப்பாளர், மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்துள்ளோம்.
மேலும் கம்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இவரைப் போல குவைத்தில் உள்ளனர். அவர்களுடைய உண்மை யான நிலையைப் பற்றியும் விசாரித்துவருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
கம்பம் தாத்தப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த இமாம்ஷா மகன் சதாம் உசேன் (26). இவருக்கு ஜாஸ்மின் பானு என்ற மனைவியும் நசுரீன், ஷர்கான் ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.
சதாம் உசேன், கடந்த 3 மாதங்களுக்கு முன் கும்பகோணத்தைச் சேர்ந்த காஜா என்பவர் மூலம், மாதம் ரூ.23,000 சம்பளத்துக்கு குவைத்தில் ஓட்டுநர் வேலைக்குச் சென்றுள்ளார்.
ஆனால் அங்கு அவரது பாஸ்போர்டை பிடிங்கி வைத்துகொண்டு ஒட்டகம் மேய்க்க அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சதாம் உசேன் அப்பணியை செய்ய முடியாது என மறுத்தபோது, அவரை மிரட்டி ஒட்டகங்களை மேய்க்கும் வேலையில் ஈடுபடுத்தி உள்ளனர்.
மேலும் கடந்த 3 மாதங்களாக அவருக்கு ஊதியம் மற்றும் சாப்பாடு சரிவர வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. பெற்றோர், உறவினர்களிடம் பேசவும் அவரை அனுமதிக்கவில்லை.
இதனால் அச்சமடைந்த சதாம் உசேன், அங்குள்ள ஒருவரது கைபேசியை வாங்கி, குவைத்தில் ஒட்டகம் மேய்க்கும் தனது பரிதாப நிலை குறித்து வீடியோ எடுத்து தன்னை எப்படியாவது காப்பாற்றும்படி தமிழகத்தில் உள்ள தனது நண்பர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரது உத்தரவால் போலிசார் நேற்று தீவிர விசாரணை நடத்தி சதாம் உசேனின் மனைவி மற்றும் பெற்றோர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து கம்பம் வடக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா கூறியதாவது, சதாம் உசேனை ஓரிரு நாளில் தமிழகம் அழைத்து வர மாவட்டக் காவல் கண் காணிப்பாளர், மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்துள்ளோம்.
மேலும் கம்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இவரைப் போல குவைத்தில் உள்ளனர். அவர்களுடைய உண்மை யான நிலையைப் பற்றியும் விசாரித்துவருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குவைத்தில் ஒட்டகம் மேய்த்த இளைஞர் தாயகம் திரும்புகிறார்: வாட்ஸ்அப் தகவலால் கிட்டிய உதவி
» லஞ்சம் கேட்டு சட்டையை பிடித்து மிரட்டிய பொலிசார்: வீடியோவால் பரபரப்பு
» காந்தி சிலையை அவமானப்படுத்திய கனடிய இந்தியர்கள்: வீடியோவால் பரபரப்பு
» லஞ்சம் கேட்டு சட்டையை பிடித்து மிரட்டிய பொலிசார்: வீடியோவால் பரபரப்பு
» காந்தி சிலையை அவமானப்படுத்திய கனடிய இந்தியர்கள்: வீடியோவால் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum