Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரிந்துபோன மகளை 35 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த தாய்

Go down

பிரிந்துபோன மகளை 35 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த தாய் Empty பிரிந்துபோன மகளை 35 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த தாய்

Post by oviya Tue Sep 08, 2015 3:03 pm

கேரளாவை சேர்ந்த தாய் ஒருவர் 35 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகளை கண்டுபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த கவுரிசபட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா( 60).

கடந்த 1979–ம் ஆண்டு இவருக்கும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த எஜுந்திரபாய் விது என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் மராட்டிய மாநிலத்தில் வசித்துவந்தனர். இவர்களுக்கு மோனிஷா என்ற மகள் பிறந்தார்.

இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கீதா கேரளாவுக்கு வந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. பின்னர் குழந்தையை கண்டுபிடிக்க முயன்றும் முடியாமல் போனது. இதனிடையே கீதா 2–வது திருமணம் செய்து கொண்டார்.

அவர் மூலம் குழந்தை பிறக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2–வது கணவரும் இறந்து போனதால் முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தை மோனிஷாவின் நினைவு வாட்டியது.

இது தொடர்பான தகவல் மலையாள பத்திரிகைகளில் வெளியானது. அதில் மோனிஷாவின் சிறு வயது படமும் இடம் பெற்றது.

இந்த செய்தியை உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்த சில மலையாளிகள் பார்த்துள்ளனர். அவர்கள் மோனிஷாவை கண்டுபிடித்து இதை தெரியப்படுத்தினர். உடனடியாக மோனிசா செல்போனில் தனது தாயை தொடர்பு கொண்டு பேசினார்.

மோனிஷாவின் குரலை கேட்டதும், ஆனந்த கண்ணீர் வடித்த கீதா பழைய சம்பவங்கள் முழுவதையும் தெரிவித்தார்.

இதைக்கேட்டு வருந்திய மோனிஷா, இப்போது தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும், தங்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விரைவில் மகன் மற்றும் கணவருடன் கேரளாவுக்கு வருவதாக உறுதி அளித்துள்ளார். சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு மகளை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளதாக கீதா தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum