Top posting users this month
No user |
பிரிந்துபோன மகளை 35 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த தாய்
Page 1 of 1
பிரிந்துபோன மகளை 35 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த தாய்
கேரளாவை சேர்ந்த தாய் ஒருவர் 35 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகளை கண்டுபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த கவுரிசபட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா( 60).
கடந்த 1979–ம் ஆண்டு இவருக்கும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த எஜுந்திரபாய் விது என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் மராட்டிய மாநிலத்தில் வசித்துவந்தனர். இவர்களுக்கு மோனிஷா என்ற மகள் பிறந்தார்.
இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கீதா கேரளாவுக்கு வந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. பின்னர் குழந்தையை கண்டுபிடிக்க முயன்றும் முடியாமல் போனது. இதனிடையே கீதா 2–வது திருமணம் செய்து கொண்டார்.
அவர் மூலம் குழந்தை பிறக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2–வது கணவரும் இறந்து போனதால் முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தை மோனிஷாவின் நினைவு வாட்டியது.
இது தொடர்பான தகவல் மலையாள பத்திரிகைகளில் வெளியானது. அதில் மோனிஷாவின் சிறு வயது படமும் இடம் பெற்றது.
இந்த செய்தியை உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்த சில மலையாளிகள் பார்த்துள்ளனர். அவர்கள் மோனிஷாவை கண்டுபிடித்து இதை தெரியப்படுத்தினர். உடனடியாக மோனிசா செல்போனில் தனது தாயை தொடர்பு கொண்டு பேசினார்.
மோனிஷாவின் குரலை கேட்டதும், ஆனந்த கண்ணீர் வடித்த கீதா பழைய சம்பவங்கள் முழுவதையும் தெரிவித்தார்.
இதைக்கேட்டு வருந்திய மோனிஷா, இப்போது தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும், தங்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விரைவில் மகன் மற்றும் கணவருடன் கேரளாவுக்கு வருவதாக உறுதி அளித்துள்ளார். சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு மகளை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளதாக கீதா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த கவுரிசபட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா( 60).
கடந்த 1979–ம் ஆண்டு இவருக்கும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த எஜுந்திரபாய் விது என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் மராட்டிய மாநிலத்தில் வசித்துவந்தனர். இவர்களுக்கு மோனிஷா என்ற மகள் பிறந்தார்.
இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கீதா கேரளாவுக்கு வந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. பின்னர் குழந்தையை கண்டுபிடிக்க முயன்றும் முடியாமல் போனது. இதனிடையே கீதா 2–வது திருமணம் செய்து கொண்டார்.
அவர் மூலம் குழந்தை பிறக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2–வது கணவரும் இறந்து போனதால் முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தை மோனிஷாவின் நினைவு வாட்டியது.
இது தொடர்பான தகவல் மலையாள பத்திரிகைகளில் வெளியானது. அதில் மோனிஷாவின் சிறு வயது படமும் இடம் பெற்றது.
இந்த செய்தியை உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்த சில மலையாளிகள் பார்த்துள்ளனர். அவர்கள் மோனிஷாவை கண்டுபிடித்து இதை தெரியப்படுத்தினர். உடனடியாக மோனிசா செல்போனில் தனது தாயை தொடர்பு கொண்டு பேசினார்.
மோனிஷாவின் குரலை கேட்டதும், ஆனந்த கண்ணீர் வடித்த கீதா பழைய சம்பவங்கள் முழுவதையும் தெரிவித்தார்.
இதைக்கேட்டு வருந்திய மோனிஷா, இப்போது தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும், தங்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விரைவில் மகன் மற்றும் கணவருடன் கேரளாவுக்கு வருவதாக உறுதி அளித்துள்ளார். சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு மகளை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளதாக கீதா தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum