Top posting users this month
No user |
Similar topics
அரசியல்வாதிகள் ஊழல், மோசடிகளை செய்து அதனை மக்களுக்கு மறைக்க முடியாது: ஜனாதிபதி
Page 1 of 1
அரசியல்வாதிகள் ஊழல், மோசடிகளை செய்து அதனை மக்களுக்கு மறைக்க முடியாது: ஜனாதிபதி
பொது நோக்கத்தை அடிப்படையாக கொண்டு நாட்டையும் மக்களையும் வெற்றி பெற செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களுக்கு சேவையாற்றுவதற்கான நிதி அனைவருக்கும் ஒரே அளவில் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
புதிய அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வில் பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளர்.
அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் ஊழல், மோசடிகளை செய்து, அதனை மக்களுக்கு மறைக்க முடியாது.
புத்த பகவான் இரகசியமாகவேனும் பாவங்களை செய்யவில்லை. அதே விதத்தில் அனைவரும் ஊழல், மோசடிகளில் ஈடுபடாது இருக்க வேண்டும்.
ஊழல், மோசடிகள் மற்றும் கொள்ளைகளில் ஈடுபடாதிருக்க அரசியல்வாதிகளின் மனச்சாட்சி பலமானதாகவும் சக்தியானதாகவும் இருக்க வேண்டும்.
பிரதமரும் நானும் கலந்துரையாடி எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைய அரச கூட்டுத்தாபனங்கள், சபைகளின் பணிப்பாளர்கள் மற்றும் தலைவர்கள் இனிவரும் காலத்தில் பொது குழுவொன்றின் ஊடாகவே நியமிக்கப்படுவார்கள். இந்த நியமனங்கள் தொடர்பான கோரிக்கைகளை அந்த பொதுக்குழுவிடம் முன்வையுங்கள் என புதிய அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
அமைச்சரவையின் அமைச்சுக்களை பகிரும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 18 அமைச்சர் பதவிகளும் 18 பிரதியமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
33 அமைச்சு பதவிகளில் 26 அமைச்சு பதவிகளையே ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளது. அது சிக்கலான சந்தர்ப்பம். மீதமுள்ள 6 அமைச்சு பதவிகள் அந்த கட்சியுடன் இணைந்து செயற்பட்ட சிறிய கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சு பதவிகளை பெற்றவர்கள் மகிழ்ச்சியடைவதும், கிடைக்காதவர்கள் கவலையடைவதும் இயற்கையானது. அமைச்சு பதவிகளை பெறாதவர்கள் நாட்டுக்கு சேவையாற்ற வேறு வழிகள் உள்ளன.
100 நாள் தற்காலிக அரசாங்கத்திற்கு பின்னர் உருவாக்கப்படும் இந்த இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் காலம் இரண்டு ஆண்கள் என்ற போதிலும் இந்த இரண்டு வருட பயணத்திற்கு அமைய எதிர்வரும் ஆண்டுகள் குறித்தும் தீர்மானிக்கப்படும்.
அத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தை கலைக்க முடியாது. அந்த நான்கரை வருடங்கள் என்பது 5 வருடங்கள் என்பதால், அதுவரை நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது.
நல்லாட்சி, ஜனநாயகம், சுதந்திரம் போன்றவற்றை முன்னேற்றி, ஊழல்,மோசடிகள் இல்லாத நாட்டை உருவாக்குவது நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கான மனச்சாட்சிக்கு இணங்க பணியாற்ற அனைவரும் திடசங்கட்பம் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மக்களுக்கு சேவையாற்றுவதற்கான நிதி அனைவருக்கும் ஒரே அளவில் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
புதிய அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வில் பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளர்.
அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் ஊழல், மோசடிகளை செய்து, அதனை மக்களுக்கு மறைக்க முடியாது.
புத்த பகவான் இரகசியமாகவேனும் பாவங்களை செய்யவில்லை. அதே விதத்தில் அனைவரும் ஊழல், மோசடிகளில் ஈடுபடாது இருக்க வேண்டும்.
ஊழல், மோசடிகள் மற்றும் கொள்ளைகளில் ஈடுபடாதிருக்க அரசியல்வாதிகளின் மனச்சாட்சி பலமானதாகவும் சக்தியானதாகவும் இருக்க வேண்டும்.
பிரதமரும் நானும் கலந்துரையாடி எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைய அரச கூட்டுத்தாபனங்கள், சபைகளின் பணிப்பாளர்கள் மற்றும் தலைவர்கள் இனிவரும் காலத்தில் பொது குழுவொன்றின் ஊடாகவே நியமிக்கப்படுவார்கள். இந்த நியமனங்கள் தொடர்பான கோரிக்கைகளை அந்த பொதுக்குழுவிடம் முன்வையுங்கள் என புதிய அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
அமைச்சரவையின் அமைச்சுக்களை பகிரும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 18 அமைச்சர் பதவிகளும் 18 பிரதியமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
33 அமைச்சு பதவிகளில் 26 அமைச்சு பதவிகளையே ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளது. அது சிக்கலான சந்தர்ப்பம். மீதமுள்ள 6 அமைச்சு பதவிகள் அந்த கட்சியுடன் இணைந்து செயற்பட்ட சிறிய கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சு பதவிகளை பெற்றவர்கள் மகிழ்ச்சியடைவதும், கிடைக்காதவர்கள் கவலையடைவதும் இயற்கையானது. அமைச்சு பதவிகளை பெறாதவர்கள் நாட்டுக்கு சேவையாற்ற வேறு வழிகள் உள்ளன.
100 நாள் தற்காலிக அரசாங்கத்திற்கு பின்னர் உருவாக்கப்படும் இந்த இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் காலம் இரண்டு ஆண்கள் என்ற போதிலும் இந்த இரண்டு வருட பயணத்திற்கு அமைய எதிர்வரும் ஆண்டுகள் குறித்தும் தீர்மானிக்கப்படும்.
அத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தை கலைக்க முடியாது. அந்த நான்கரை வருடங்கள் என்பது 5 வருடங்கள் என்பதால், அதுவரை நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது.
நல்லாட்சி, ஜனநாயகம், சுதந்திரம் போன்றவற்றை முன்னேற்றி, ஊழல்,மோசடிகள் இல்லாத நாட்டை உருவாக்குவது நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கான மனச்சாட்சிக்கு இணங்க பணியாற்ற அனைவரும் திடசங்கட்பம் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கடந்த அரசின் ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய புதிய ஜனாதிபதி ஆணைக்குழு
» உள்ளூர் விசாரணைப் பொறிமுறைக்கு ஹிஸ்புல்லாஹ் ஒத்துழைத்தால் அவரது ஊழல் மோசடிகளை நிரூபிக்க முடியும்: என்.எப்.ஜி.ஜி.
» அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள்: அரசியல்வாதிகள், அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி கோரல்
» உள்ளூர் விசாரணைப் பொறிமுறைக்கு ஹிஸ்புல்லாஹ் ஒத்துழைத்தால் அவரது ஊழல் மோசடிகளை நிரூபிக்க முடியும்: என்.எப்.ஜி.ஜி.
» அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள்: அரசியல்வாதிகள், அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி கோரல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum