Top posting users this month
No user |
சனல்-4 போர்க்குற்ற காணொளி! அதில் தோன்றிய இராணுவத்தினர் யார்? தொடரும் விசாரணை
Page 1 of 1
சனல்-4 போர்க்குற்ற காணொளி! அதில் தோன்றிய இராணுவத்தினர் யார்? தொடரும் விசாரணை
இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
சனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட போர்க்குற்றம் தொடர்பான ஆவணப் படம் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றம் குறித்த பல ஆதாரங்கள் அடங்கிய ஆவண காணொளியை, கலம் மெக்ரே தயாரித்திருந்தார். இது சர்வதேச ரீதியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் வழமை போன்று இது போலியான ஆவணப்படம் என இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது.
ஆனாலும் குறித்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்து ஆராய நோக்கில், 2013ம் ஆண்டிலிருந்து இலங்கை இராணுவத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த காட்சியில் தோன்றுவது இராணுவமா? என்பதை அடையாளப்படுத்தும் நோக்கில் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட போர்க்குற்றம் தொடர்பான ஆவணப் படம் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றம் குறித்த பல ஆதாரங்கள் அடங்கிய ஆவண காணொளியை, கலம் மெக்ரே தயாரித்திருந்தார். இது சர்வதேச ரீதியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் வழமை போன்று இது போலியான ஆவணப்படம் என இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது.
ஆனாலும் குறித்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்து ஆராய நோக்கில், 2013ம் ஆண்டிலிருந்து இலங்கை இராணுவத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த காட்சியில் தோன்றுவது இராணுவமா? என்பதை அடையாளப்படுத்தும் நோக்கில் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum