Top posting users this month
No user |
பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை எலி கடித்து பலி: ஆந்திராவில் சோகம்
Page 1 of 1
பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை எலி கடித்து பலி: ஆந்திராவில் சோகம்
ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடா மாவட்டம் கிருஷ்ணா நகரை சேர்ந்த நாகராஜூ என்பவரது மனைவி லட்சுமிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
பிறந்த குழந்தைக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனையில் கடந்த 19ம் திகதி குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் எலி ஒன்று குழந்தையின் கைகளை கடித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவர்களிடம் தெரிவித்தும் எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் இருந்துள்ளனர்.
பின்னர் நேற்று காலை மீண்டும் குழந்தையின் கை, கால், முகம், மார்பு உள்ளிட்ட பகுதியில் எலி கடித்துள்ளது.
இதில் படுகாயமடைந்த பச்சிளம் குழந்தை சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து குழந்தையின் தாய், அவரது உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்தது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநில மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் காமினேனி சீனிவாஸ் நிருபர்களிடம் கூறுகையில், குண்டூர் அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை இருப்பதாக அடிக்கடி புகார்கள் வருகிறது.
ஆனால் மருத்துவ நிர்வாகத்தினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், இந்த குழந்தை இறப்புக்கு காரணமான ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
விஜயவாடா மாவட்டம் கிருஷ்ணா நகரை சேர்ந்த நாகராஜூ என்பவரது மனைவி லட்சுமிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
பிறந்த குழந்தைக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனையில் கடந்த 19ம் திகதி குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் எலி ஒன்று குழந்தையின் கைகளை கடித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவர்களிடம் தெரிவித்தும் எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் இருந்துள்ளனர்.
பின்னர் நேற்று காலை மீண்டும் குழந்தையின் கை, கால், முகம், மார்பு உள்ளிட்ட பகுதியில் எலி கடித்துள்ளது.
இதில் படுகாயமடைந்த பச்சிளம் குழந்தை சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து குழந்தையின் தாய், அவரது உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்தது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநில மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் காமினேனி சீனிவாஸ் நிருபர்களிடம் கூறுகையில், குண்டூர் அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை இருப்பதாக அடிக்கடி புகார்கள் வருகிறது.
ஆனால் மருத்துவ நிர்வாகத்தினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், இந்த குழந்தை இறப்புக்கு காரணமான ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum