Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கூட்டமைப்புக்கும், நிஷாவுக்கும் இடையே சந்திப்பு - இலங்கை சென்றதால் போர்க்குற்ற விசாரணையில் நிகழுமா மாற்றம்...?

Go down

கூட்டமைப்புக்கும், நிஷாவுக்கும் இடையே சந்திப்பு - இலங்கை சென்றதால் போர்க்குற்ற விசாரணையில் நிகழுமா மாற்றம்...? Empty கூட்டமைப்புக்கும், நிஷாவுக்கும் இடையே சந்திப்பு - இலங்கை சென்றதால் போர்க்குற்ற விசாரணையில் நிகழுமா மாற்றம்...?

Post by oviya Wed Aug 26, 2015 3:02 pm

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை சென்றிருக்கும் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையிலேயே இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது, தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலைமைகள் தொடர்பில் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டதாகவும் கடந்த தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்மக்களின் காணி விடுவிப்பு, வடக்கு கிழக்கு கடற்பரப்பில் தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் யுத்தக்குற்ற அறிக்கை வெளியிடப்ப்படும் என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று நிஷா பீஷ்வால் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொழும்பில் இன்று சுமார் ஒன்றறை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை அறிக்கை குறித்து பேசப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை வலியுறுத்தும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் தீர்மானம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய முக்கிய பங்காளர்களின் ஒத்துழைப்புடனான இந்த தீர்மானம் அடுத்த மாதம் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்டவுள்ளதாக மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மீதான துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு கடந்த ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் மூன்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதில் அமெரிக்கா முன்னின்று செயற்பட்டிருந்தது.

எனினும் எவ்வாறாயினும் புதிய மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் உறுதியளித்த உள்ளக விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக நிஷா பிஷ்வால் தற்போது கூறியுள்ளார்.

அமெரிக்க தீர்மானத்தில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் நிஷா பிஷ்வால் எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை.

எனினும் அடுத்த மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை பின்பற்றியதாக இந்த தீர்மானம் இருக்குமென நிஷா பிஷ்வால் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum