Top posting users this month
No user |
சுஜீவ சேனசிங்க இன்று நீதிமன்றத்தில் ஆஜர்?
Page 1 of 1
சுஜீவ சேனசிங்க இன்று நீதிமன்றத்தில் ஆஜர்?
முன்னாள் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஹோமாகம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.முன்னாள் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஹோமாகம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதுருகிரிய பிரதேசத்தில் முன்னாள் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தேர்தல் விதிகளை மீறி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்போது அமைச்சரின் பிரச்சார நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்த அதுருகிரிய பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர், பிரதியமைச்சர் தன்னைத் திட்டி, தனது கடமைகளைச் செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது குறித்து அதுருகிரிய பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு முன்னதாக இரண்டு தடவைகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. எனினும் நீதிமன்ற அழைப்பாணை தனக்குக் கிடைக்கவில்லை என்று தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்த சுஜீவ சேனசிங்க, நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை.
இதனையடுத்து அழைப்பாணையை அவரது சட்டத்தரணியிடம் கையளித்திருந்த நீதிமன்றம், இன்று ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சுஜீவ சேனசிங்கவிற்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே பிரதியமைச்சருடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜண்ட் விமல் வீரவங்சவின் ஆதரவாளர் என்றும், விமலின் ஏற்பாட்டின் பேரிலேயே அவர் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் சுஜீவ சேனசிங்கவுடன் மோதலை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதுருகிரிய பிரதேசத்தில் முன்னாள் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தேர்தல் விதிகளை மீறி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்போது அமைச்சரின் பிரச்சார நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்த அதுருகிரிய பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர், பிரதியமைச்சர் தன்னைத் திட்டி, தனது கடமைகளைச் செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது குறித்து அதுருகிரிய பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு முன்னதாக இரண்டு தடவைகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. எனினும் நீதிமன்ற அழைப்பாணை தனக்குக் கிடைக்கவில்லை என்று தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்த சுஜீவ சேனசிங்க, நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை.
இதனையடுத்து அழைப்பாணையை அவரது சட்டத்தரணியிடம் கையளித்திருந்த நீதிமன்றம், இன்று ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சுஜீவ சேனசிங்கவிற்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே பிரதியமைச்சருடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜண்ட் விமல் வீரவங்சவின் ஆதரவாளர் என்றும், விமலின் ஏற்பாட்டின் பேரிலேயே அவர் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் சுஜீவ சேனசிங்கவுடன் மோதலை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum