Top posting users this month
No user |
என்னுடைய தேர்தல் தோல்விக்கு மஹிந்தவே காரணம்!- லலித் திஸாநாயக்க
Page 1 of 1
என்னுடைய தேர்தல் தோல்விக்கு மஹிந்தவே காரணம்!- லலித் திஸாநாயக்க
என்னுடைய தேர்தல் தோல்விக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே காரணம் என முன்னாள் பிரதி அமைச்சரும், அரநாயக்க தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான லலித் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நான் தோல்வியைத் தழுவவில்லை. தோற்கடிக்கப்பட்டிருக்கின்றேன். எங்களுடன் இருக்கும் தரப்பினரே அவ்வாறு செய்தார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் இவர்களினால் எனக்கு அதிகளவு சவால் காணப்பட்டது.
எமது குழுவினை மஹிந்த குழு, மைத்திரி குழு என இரண்டாக பிரித்தார்கள்.
அவர்கள் இந்த பிளவினை கிராம மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையில் எடுத்துச் சென்றனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி எடுத்த நான் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளன் என பிரச்சாரம் செய்தார்கள். சில எண்களுக்கு மட்டும் விருப்பு வாக்கு அளிக்குமாறு கோரியிருந்தனர்.
கேகாலையில் நடைபெற்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச நேரடியாகவே பெயர் குறிப்பிட்டு இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பும் எனது தோல்விக்கு ஓர் முக்கிய காரணியாக அமைந்தது.
வெற்றியைப் போன்றே தோல்வியும் எனக்கு நன்றாக பழக்கமானதுதான். 2001ம் ஆண்டு தோல்வியைத் தழுவி பதவியின்றி வீடு சென்றேன். பின்னர் நாம் வெற்றியீட்டினோம்.
தோல்வியடைந்தாலும் நாம் வேறு கட்சிகளுக்கு செல்லவில்லை. வெற்றி தோல்வி என்ற போதிலும் கட்சியுடன் இருந்திருக்கின்றேன்.
எனக்கு சட்டத்தரணி தொழில் இருக்கின்றது. அதில் உழைத்து சாப்பிட முடியும் என லலித் திஸாநாயக்க அரநாயக்கவில் அமைந்துள்ள தனது வீட்டில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நான் தோல்வியைத் தழுவவில்லை. தோற்கடிக்கப்பட்டிருக்கின்றேன். எங்களுடன் இருக்கும் தரப்பினரே அவ்வாறு செய்தார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் இவர்களினால் எனக்கு அதிகளவு சவால் காணப்பட்டது.
எமது குழுவினை மஹிந்த குழு, மைத்திரி குழு என இரண்டாக பிரித்தார்கள்.
அவர்கள் இந்த பிளவினை கிராம மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையில் எடுத்துச் சென்றனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி எடுத்த நான் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளன் என பிரச்சாரம் செய்தார்கள். சில எண்களுக்கு மட்டும் விருப்பு வாக்கு அளிக்குமாறு கோரியிருந்தனர்.
கேகாலையில் நடைபெற்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச நேரடியாகவே பெயர் குறிப்பிட்டு இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பும் எனது தோல்விக்கு ஓர் முக்கிய காரணியாக அமைந்தது.
வெற்றியைப் போன்றே தோல்வியும் எனக்கு நன்றாக பழக்கமானதுதான். 2001ம் ஆண்டு தோல்வியைத் தழுவி பதவியின்றி வீடு சென்றேன். பின்னர் நாம் வெற்றியீட்டினோம்.
தோல்வியடைந்தாலும் நாம் வேறு கட்சிகளுக்கு செல்லவில்லை. வெற்றி தோல்வி என்ற போதிலும் கட்சியுடன் இருந்திருக்கின்றேன்.
எனக்கு சட்டத்தரணி தொழில் இருக்கின்றது. அதில் உழைத்து சாப்பிட முடியும் என லலித் திஸாநாயக்க அரநாயக்கவில் அமைந்துள்ள தனது வீட்டில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum