Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


2010 தேர்தல் முடிவு மகிந்தவை பொய்யனாக்கியது:சுமந்திரன்

Go down

2010 தேர்தல் முடிவு மகிந்தவை பொய்யனாக்கியது:சுமந்திரன் Empty 2010 தேர்தல் முடிவு மகிந்தவை பொய்யனாக்கியது:சுமந்திரன்

Post by oviya Fri Aug 07, 2015 3:16 pm

2010இல் போரை முன்னின்று நடத்திய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கே மக்கள் தங்களின் வாக்கை அளித்து அவருக்கு எதிரான தண்டனையை வாங்கிக் கொடுத்தார்கள்.
தமிழ் மக்கள் அப்படிச் செய்த காரணத்தினால் தான் 2010ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வந்தபோது வடக்கு கிழக்கு வேறு வர்ணத்தில் தீட்டிக் காட்டப்பட்டது.

தமிழ் மக்களை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து மீட்டெடுப்பதற்காக, நான் இந்த போரை நடத்தி வெற்றி பெற்றேன் என்று மகிந்த ராஜபக்ச சர்வதேசத்திற்கு சொன்னார். ஆனால் தேர்தல் முடிவு அவரைப் பொய்யனாக்கியது என சுன்னாகத்தில் இடம்பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேசம் எமது மக்களுக்கு நிரந்தர தீர்வு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக மக்கள் ஆணை வழங்கவேண்டும்:  எம்.ஏ.சுமந்திரன்

கிளிநொச்சி பளைப்பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டம் அப்பகுதியின் கட்சியின் அமைப்பாளர் சாந்தன்  தலைமையில் நேற்று நடைபெற்றது.

இங்கு கலந்துகொண்டிருந்த யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் முள்ளான் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்  உரையாற்றும்போது,

இந்தத்தேர்தலில் தமிழ் மக்கள் ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என்பது சர்வதேசத்தோடு பின்னிப்பிணைந்துள்ளது.

இந்த தேர்தல் நடந்த சில வாரங்களில் ஐ.நாடுகள் சபையில் முக்கியமான இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கின்றது.

இதன் மூலம் தமிழ் மக்கள் மீது போர்குற்றங்கள் மனிதாபிமான மீறல்கள் புரிந்தவர்களுக்கு எத்தகைய நீதி மன்றுகளில் எத்தகைய தண்டனைகளை வழங்கலாம் என்ற சிபார்சுகளும் வருமென எதிர்பார்க்கின்றோம்.

அதேவேளை தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை பற்றியும் பரிந்துரைகள் வர இருக்கின்றன. இந்த நிலையில்  தமிழ் மக்கள் தங்கள் இனப்பிரச்சினை தொடர்பில் என் நிலைப்பாட்டில் உள்ளார்களென இந்த தேர்தலில் சொல்லியுள்ளார்கள் என்பதையும் சர்வதேசம் கவனிக்கும் எனவே தமிழ் மக்கள் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நிரந்தர தீர்வு தொடர்கில் முழுமையான ஆணை கிடைக்கவேண்டும் என தெரிவித்தார்.



இங்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சி.சிறீதரன் உரையாற்றும்போது,

இந்த தேர்தலில் ஏன் போட்டியிடுகின்றது  எங்களால் என்ன செய்ய முடியும் என கேட்கிறார்கள். நாங்கள் இதுவரை செய்தவற்றை சொல்லிக்காட்டுவதில்லை. எங்களுக்கு அபிவிருத்தி செய்யமுடியாதா என கேட்கிறார்கள்.

எங்களால் நிகழ்த்தப்பட்ட அபிவிருத்திகளை நாம் சொல்வதில்லை. ஏன் அது எமது மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. இன்று வடக்கு கிழக்கிலே நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டம். எமது கட்சியின் தலைவர் சம்மந்தன் ஐயா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வன்னிப்பயணத்தின் அடிப்படையில் இந்திய பிரதமருக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையின் மூலம் வழங்கப்பட்டது.

வடக்கு கிழக்கிற்கான மக்களுக்கான அபிவிருத்திக்கான நிதிகள் எமது வேண்டுகோள் மூலம் சர்வதேசத்தால் வழங்கப்பட்டவை. ஆனால் எமது பிரதான நோக்கம் நிரந்தர பிரச்சனையான உரிமைப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு அதன் அடிப்படையிலான நிரந்தர அபிவிருத்திகளே என தெரிவித்தார்.



இங்கு கலந்து கொண்ட யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவரான மதினி நெல்சன் உரையாற்றும்போது,

தமிழ் தேசிய கூட்டமைப்பு பெண்களுக்கு தனி அந்தஸ்து கொடுத்து தேர்தல் என்னை இறக்கியிருக்கின்றது. இதன் மூலம் நாம் பெண்களுக்கு பெண்களின்  அபிலாசைகள் குறித்து அதிகாரத்துடன் பேசவதற்கு ஒரு வாய்ப்பு அமைகின்றது என தெரிவித்தார்.



இங்கு உரையாற்றிய வடக்கு மகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் உரையாற்றும்போது,

எமது மாவட்டத்தை பொறுத்தவரை சி.சிறீதரன் முக்கியமானவர். அவர் எமது பல பிரச்சனைகளுக்கு தீர்வளித்திருக்கின்றார். இந்த மண்ணிலேயே வாழ்கின்றவர். ஒரு கல்வியாளர். எமது மாவட்டத்தில் முன்னேற்றத்தை நாம் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு சி.சிறீதரன் பாராளுமன்றம் செல்லவேண்டியது அவசியம் என தெரிவித்தார்.



கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞர் அணித்தலைவர் சுரேன் உரையாற்றும்போது,

நாம் மீண்டும் தமிழர்கள் என்பதை நிரூபிக்கவேண்டியுள்ளது. சிங்கள இனவாதிகளுக்கும் சர்வதேசத்துக்கும் இனவாதிகளோடு அடிவருகின்ற கூட்டங்களுக்கும் நாம் தமிழ் தேசிய சிந்தனையில் இருந்து மாறுபடாதவர்கள் என்பதை எதிர்வரும் 17ம் திகதி சொல்லவேண்டும் என  தெரிவித்தார்.



தலைவர் பிரபாகரன் தந்த பலத்தை நாம் இழக்கக்கூடாது என யாழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி அதிபருமான அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.



நாம் பலம் இழந்தால் எதிரி இலகுவில் எம்மை வேட்டையாடிவிடுவான்.தலைவர் பிரபாகரன் காலத்தில் நாம் பலமாக இருந்த காரணத்தால்தான் நாம் சம பந்தியில் இருந்து பேசினோம். எம்மை நோக்கி நோர்வே யப்பான் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கைகுலுக்கின. துரதிஸ்ட வசமாக எமது பலத்தை 2009ல் இழக்க நேரிட்ட சந்தர்ப்பத்தில் தலைவர் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு என் கட்டமைப்பு தமிழர் பலத்தை மீண்டும் நிரூபிக்க சாதகமாய் இருந்தது என மேலும் தெரிவித்தார்.

ஐ.நா.சபை வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சனையை எடுத்துச்சென்றது என பளை பிரதேச அமைப்பாளர் சாந்தன் தலைமை தாங்கி உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum