Top posting users this month
No user |
பொலிஸாரை விமர்சித்த டெல்லி முதல்வர்! பகிரங்க மன்னிப்பு கோரினார்
Page 1 of 1
பொலிஸாரை விமர்சித்த டெல்லி முதல்வர்! பகிரங்க மன்னிப்பு கோரினார்
பொலிஸாரை அவமரியாதையாக குறிப்பிட்டு விமர்சித்தமைக்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கும் போது பொலிஸாரை விமர்சனம் செய்து பேசினார். அப்போது அவர் ‘‘துல்லா’’ என்று பொலிஸாரை குறிப்பிட்டார். டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அவமரியாதையாக பேசும்போதுதான் ‘‘துல்லா’’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.
முதலமைச்சரினால் இந்த வார்த்தையை பயன்படுத்தியதை கேட்ட பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் டெல்லி லஜ்பத் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியான அஜய்குமார் என்பவர் முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, கெஜ்ரிவால் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில், பொலிஸாரை “துல்லா” என்று அழைத்தமைக்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்த அவரிடம் இந்த பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பதிலளித்த கெஜ்ரிவால், ’தெரு வியாபாரிகளின் அமோக ஆதரவுடன் டெல்லி சட்டசபை தேர்தலில் நாங்கள் (ஆம் ஆத்மி) 67 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அவர்களிடம் லஞ்சம் கேட்டு பொலிஸார் தொல்லை தருவதாக வியாபாரிகள் எங்களிடம் கூறும்போது எனக்கு மனது வலித்தது.
இதைப்போன்ற பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டே தீர வேண்டும். இத்தகைய பொலிஸாரை தான் நான் “துல்லா” என்று குறிப்பிட்டேன். எனது விமர்சனத்தால் நமது நேர்மையான பொலிஸ் அதிகாரிகளின் மனம் புண்பட்டிருக்குமானால் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கும் போது பொலிஸாரை விமர்சனம் செய்து பேசினார். அப்போது அவர் ‘‘துல்லா’’ என்று பொலிஸாரை குறிப்பிட்டார். டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அவமரியாதையாக பேசும்போதுதான் ‘‘துல்லா’’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.
முதலமைச்சரினால் இந்த வார்த்தையை பயன்படுத்தியதை கேட்ட பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் டெல்லி லஜ்பத் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியான அஜய்குமார் என்பவர் முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, கெஜ்ரிவால் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில், பொலிஸாரை “துல்லா” என்று அழைத்தமைக்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்த அவரிடம் இந்த பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பதிலளித்த கெஜ்ரிவால், ’தெரு வியாபாரிகளின் அமோக ஆதரவுடன் டெல்லி சட்டசபை தேர்தலில் நாங்கள் (ஆம் ஆத்மி) 67 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அவர்களிடம் லஞ்சம் கேட்டு பொலிஸார் தொல்லை தருவதாக வியாபாரிகள் எங்களிடம் கூறும்போது எனக்கு மனது வலித்தது.
இதைப்போன்ற பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டே தீர வேண்டும். இத்தகைய பொலிஸாரை தான் நான் “துல்லா” என்று குறிப்பிட்டேன். எனது விமர்சனத்தால் நமது நேர்மையான பொலிஸ் அதிகாரிகளின் மனம் புண்பட்டிருக்குமானால் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum