Top posting users this month
No user |
Similar topics
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோகுமா?
Page 1 of 1
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோகுமா?
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்களன்று கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் வழங்கிய தண்டனைகளை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 11ம் திகதி அளித்த தீர்ப்பில் தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில் கணக்கியல் பிழைகள் இருந்ததால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் தெரிவித்தன.
நீண்ட இழுபறிக்கு பின்னர் கர்நாடக அரசும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு முடிவு செய்வது என்ற முடிவுக்கு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து மேல்முறையீட்டின் போது உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக ஆச்சாரியா, சந்தேஷ் சவுட்டா ஆகிய மூத்த வழக்கறிஞர்களை கர்நாடக அரசு நியமித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறை முடிந்து வழக்கமான அலுவல்கள் யூலை முதல் வாரம் தொடங்க உள்ளன.
எனவே, அவசரமாக மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று ஆச்சாரியா டீம் முடிவு செய்து பொறுமையாக அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா தலைமையில், தயாரிக்கப்பட்டு வந்த மேல்முறையீட்டு மனு தொடர்பான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் வரும் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மனுவில், உயர் நீதிமன்ற தீர்ப்பிலுள்ள குளறுபடிகளை சுட்டிக் காட்டி, ஜெயலலிதாவை மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தி்ல் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கர்நாடகா கேட்க உள்ளது.
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து இறங்க வேண்டிவருவதோடு, வரும் 27ம் திகதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் அவர் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் வழங்கிய தண்டனைகளை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 11ம் திகதி அளித்த தீர்ப்பில் தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில் கணக்கியல் பிழைகள் இருந்ததால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் தெரிவித்தன.
நீண்ட இழுபறிக்கு பின்னர் கர்நாடக அரசும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு முடிவு செய்வது என்ற முடிவுக்கு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து மேல்முறையீட்டின் போது உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக ஆச்சாரியா, சந்தேஷ் சவுட்டா ஆகிய மூத்த வழக்கறிஞர்களை கர்நாடக அரசு நியமித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறை முடிந்து வழக்கமான அலுவல்கள் யூலை முதல் வாரம் தொடங்க உள்ளன.
எனவே, அவசரமாக மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று ஆச்சாரியா டீம் முடிவு செய்து பொறுமையாக அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா தலைமையில், தயாரிக்கப்பட்டு வந்த மேல்முறையீட்டு மனு தொடர்பான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் வரும் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மனுவில், உயர் நீதிமன்ற தீர்ப்பிலுள்ள குளறுபடிகளை சுட்டிக் காட்டி, ஜெயலலிதாவை மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தி்ல் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கர்நாடகா கேட்க உள்ளது.
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து இறங்க வேண்டிவருவதோடு, வரும் 27ம் திகதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் அவர் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு: கர்நாடக அரசு இன்று முடிவு
» கர்நாடக அமைச்சரவை இன்று கூடுகிறது! ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு முடிவா?
» ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு அவசியமா? பா.ஜ தலைவரின் காரசார பேட்டி
» கர்நாடக அமைச்சரவை இன்று கூடுகிறது! ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு முடிவா?
» ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு அவசியமா? பா.ஜ தலைவரின் காரசார பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum