Top posting users this month
No user |
வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி ஜே.வி.பி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது!
Page 1 of 1
வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி ஜே.வி.பி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது!
மக்கள் ஆணைக்கு மதிப்பளி! வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்று! என்ற தலைப்பில் மக்கள் விடுதலை முன்னணி நாளை கொழும்பில் பேரணி ஒன்றையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்த உள்ளதாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல், தகவல் அறியும் சட்டமூலத்தை நிறைவேற்றுதல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறி கோவையை நிறைவேற்றுதல், தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், மருந்து கொள்கையை செயற்படுத்துதல் ஆகிய அடிப்படையான வாக்குறுதிகளை தற்போதைய அரசாங்கம் மறந்து போய்விட்டதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மாபொல புலமைப் பரிசில் தொகையை 5 ஆயிரமாக உயர்த்துதல், தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரித்தல், அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குதல் உட்பட பல வாக்குறுதிகளை அரசாங்கம் தவறவிட்டுள்ளது.
இதனால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்த மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பேரணி நாளை பிற்பகல் 3 மணிக்கு புஞ்சி பொரள்ளை சந்தியில் ஆரம்பமாக உள்ளதுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல், தகவல் அறியும் சட்டமூலத்தை நிறைவேற்றுதல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறி கோவையை நிறைவேற்றுதல், தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், மருந்து கொள்கையை செயற்படுத்துதல் ஆகிய அடிப்படையான வாக்குறுதிகளை தற்போதைய அரசாங்கம் மறந்து போய்விட்டதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மாபொல புலமைப் பரிசில் தொகையை 5 ஆயிரமாக உயர்த்துதல், தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரித்தல், அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குதல் உட்பட பல வாக்குறுதிகளை அரசாங்கம் தவறவிட்டுள்ளது.
இதனால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்த மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பேரணி நாளை பிற்பகல் 3 மணிக்கு புஞ்சி பொரள்ளை சந்தியில் ஆரம்பமாக உள்ளதுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum