Top posting users this month
No user |
மாயமான கடலோர காவல் படை விமானம்: கடலுக்கு கீழே 850 மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிப்பு
Page 1 of 1
மாயமான கடலோர காவல் படை விமானம்: கடலுக்கு கீழே 850 மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிப்பு
மாயமான இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானம் சீர்காழி அருகே கடலுக்கு அடியில் கிடப்பது தெரியவந்துள்ளது.
ஆப்ரேஷன் ஆம்லாவிற்காக சென்னையில் இருந்து விமானி வித்யாசாகர், துணை விமானி சுபாஷ் சுரேஷ், கண்காணிப்பாளர் எம்.கே.சோனி ஆகியோருடன் கடந்த 8ம் திகதி சென்ற விமானம் திடீரென்று மறைந்து மாயமாகி விட்டது.
காரைக்கால் அருகே பறந்து கொண்டிருந்த போது மாயமாகி இருக்கலாம் என்று கருதப்பட்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல், மாயமான விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட காரைக்கால் கடல் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்ட போது, மாயமான விமானத்தின் கருப்பு பெட்டி சிக்னல் கடலுக்கு அடியில் இருந்து வருவதை கண்டுபிடித்தது.
இதையடுத்து சீர்காழி அருகே உள்ள பழையாறில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த சிந்துஜா நீர்மூழ்கி கப்பல், கடலுக்கு கீழே 850 மீற்றர் ஆழத்தில் விமானம் விழுந்து கிடப்பதை கண்டுபிடித்தது.
கடலோர காவல் படை ஐ.ஜி. எஸ்.பி.சர்மா நிருபர்களிடம் கூறுகையில், விமானம் இருக்கும் இடம் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
நீர்முழ்கி கப்பலை கொண்டு விமானத்தை மேலே கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
எனவே விரைவில் விமானம் மேலே கொண்டு வரப்படும் என தெரிகிறது.
ஆப்ரேஷன் ஆம்லாவிற்காக சென்னையில் இருந்து விமானி வித்யாசாகர், துணை விமானி சுபாஷ் சுரேஷ், கண்காணிப்பாளர் எம்.கே.சோனி ஆகியோருடன் கடந்த 8ம் திகதி சென்ற விமானம் திடீரென்று மறைந்து மாயமாகி விட்டது.
காரைக்கால் அருகே பறந்து கொண்டிருந்த போது மாயமாகி இருக்கலாம் என்று கருதப்பட்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல், மாயமான விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட காரைக்கால் கடல் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்ட போது, மாயமான விமானத்தின் கருப்பு பெட்டி சிக்னல் கடலுக்கு அடியில் இருந்து வருவதை கண்டுபிடித்தது.
இதையடுத்து சீர்காழி அருகே உள்ள பழையாறில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த சிந்துஜா நீர்மூழ்கி கப்பல், கடலுக்கு கீழே 850 மீற்றர் ஆழத்தில் விமானம் விழுந்து கிடப்பதை கண்டுபிடித்தது.
கடலோர காவல் படை ஐ.ஜி. எஸ்.பி.சர்மா நிருபர்களிடம் கூறுகையில், விமானம் இருக்கும் இடம் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
நீர்முழ்கி கப்பலை கொண்டு விமானத்தை மேலே கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
எனவே விரைவில் விமானம் மேலே கொண்டு வரப்படும் என தெரிகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum