Top posting users this month
No user |
ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம்: திராவிட விடுதலைக் கழகத்தினர் 7 பேர் விடுதலை
Page 1 of 1
ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம்: திராவிட விடுதலைக் கழகத்தினர் 7 பேர் விடுதலை
கடந்த ஆண்டு திருப்பதிக்கு வருகை தந்த இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவை கண்டித்து மன்னார்குடியில் அவரது உருவபொம்மையை எரித்த குற்றச்சாட்டப்பட்ட வழக்கில் மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றிய விபரம்:
கடந்த ஆண்டு திருப்பதிக்கு வருகை தந்த இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவை கண்டித்து மன்னார்குடியில் அவரது உருவபொம்மையை எரித்து திராவிடர் விடுதலைக் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுபோல் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் உமாபதி தாக்கப்பட்டதை கண்டித்தும் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கண்ட இரண்டு போராட்டங்களும் போலீசாரின் அனுமதியின்றி நடைபெற்றதாக கூறி போரட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட செயலாளர் காளிதாசு உட்பட 7 பேர் மீது மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரனை மன்னார்குடி சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் செந்தமிழ்செல்வன், பாலசுப்ரமணியன் ஆகியோர் திராவிடர் விடுதலைக் கழகத்தினருக்காக வாதாடினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் அனைவரையும் விடுதலை செய்து கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
இதுகுறித்து திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட செயலாளர் காளிதாசு கூறுகையில்,
ஜனநாயக முறையில் போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த பின்னரே போராட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்கின்றோம். ஆனால் போராட்டம் நடத்துவதற்கு ஓரிரு மணித்துளிகளுக்கு முன்பு உங்களது போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இதுபோன்ற போக்கு அதிகரித்துள்ளதால் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மீது அடிக்கடி வழக்குகள் போடபட்டுகின்றன. இதனை எதிர்காலத்தில் போலீஸார் தவிர்த்து கொள்ளவேண்டும் என கூறினார்.
இதுபற்றிய விபரம்:
கடந்த ஆண்டு திருப்பதிக்கு வருகை தந்த இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவை கண்டித்து மன்னார்குடியில் அவரது உருவபொம்மையை எரித்து திராவிடர் விடுதலைக் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுபோல் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் உமாபதி தாக்கப்பட்டதை கண்டித்தும் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கண்ட இரண்டு போராட்டங்களும் போலீசாரின் அனுமதியின்றி நடைபெற்றதாக கூறி போரட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட செயலாளர் காளிதாசு உட்பட 7 பேர் மீது மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரனை மன்னார்குடி சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் செந்தமிழ்செல்வன், பாலசுப்ரமணியன் ஆகியோர் திராவிடர் விடுதலைக் கழகத்தினருக்காக வாதாடினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் அனைவரையும் விடுதலை செய்து கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
இதுகுறித்து திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட செயலாளர் காளிதாசு கூறுகையில்,
ஜனநாயக முறையில் போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த பின்னரே போராட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்கின்றோம். ஆனால் போராட்டம் நடத்துவதற்கு ஓரிரு மணித்துளிகளுக்கு முன்பு உங்களது போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இதுபோன்ற போக்கு அதிகரித்துள்ளதால் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மீது அடிக்கடி வழக்குகள் போடபட்டுகின்றன. இதனை எதிர்காலத்தில் போலீஸார் தவிர்த்து கொள்ளவேண்டும் என கூறினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum