Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


20வது திருத்தம்- ஆசன எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Go down

20வது திருத்தம்- ஆசன எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் Empty 20வது திருத்தம்- ஆசன எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Post by oviya Fri Jun 12, 2015 2:57 pm

20வது திருத்தச்சட்டம் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த புதிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


கடந்த திங்கட்கிழமை நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை அமைக்கவும், இதில் 125 உறுப்பினர்களை தொகுதி வாரியாகத் தெரிவு செய்யவும், 75 பேரை மாவட்ட அடிப்படையில் விகிதாசார முறைப்படி தீர்வு செய்யவும், எஞ்சிய 25 பேரை தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கவும் வகை செய்யும் திருத்த யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால், இந்த யோசனைக்கு 18 சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகள்மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், இன்று அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கூடிய கூட்டத்தின் போதே அந்த புதிய யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதன்படி, 237 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனை அமைச்சரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 237 உறுப்பினர்களில், 145 பேர் தொகுதி வாரியாகத் தெரிவு செய்யப்படுவர் என்றும், ஏனையோர் விகிதாசார முறை மற்றும் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அமைச்சரவை அனுமதி கிட்டியுள்ள குறித்த சட்டமூலம் இன்று வர்த்தமானியில் சேர்க்கப்படவுள்ளது.

20வது திருத்தம் தொடர்பில் இன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்- அமைச்சர் ராஜித

20வது திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று அமைச்சரவைக் கூட்டத்தின்போது இதனை தெரிவித்துள்ளார்.

20வது திருத்தம் தொடர்பில் இறுதி வரைபு மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum