Top posting users this month
No user |
20வது திருத்தம்- ஆசன எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்
Page 1 of 1
20வது திருத்தம்- ஆசன எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்
20வது திருத்தச்சட்டம் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த புதிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை அமைக்கவும், இதில் 125 உறுப்பினர்களை தொகுதி வாரியாகத் தெரிவு செய்யவும், 75 பேரை மாவட்ட அடிப்படையில் விகிதாசார முறைப்படி தீர்வு செய்யவும், எஞ்சிய 25 பேரை தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கவும் வகை செய்யும் திருத்த யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால், இந்த யோசனைக்கு 18 சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகள்மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், இன்று அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கூடிய கூட்டத்தின் போதே அந்த புதிய யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, 237 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனை அமைச்சரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த 237 உறுப்பினர்களில், 145 பேர் தொகுதி வாரியாகத் தெரிவு செய்யப்படுவர் என்றும், ஏனையோர் விகிதாசார முறை மற்றும் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அமைச்சரவை அனுமதி கிட்டியுள்ள குறித்த சட்டமூலம் இன்று வர்த்தமானியில் சேர்க்கப்படவுள்ளது.
20வது திருத்தம் தொடர்பில் இன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்- அமைச்சர் ராஜித
20வது திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று அமைச்சரவைக் கூட்டத்தின்போது இதனை தெரிவித்துள்ளார்.
20வது திருத்தம் தொடர்பில் இறுதி வரைபு மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை அமைக்கவும், இதில் 125 உறுப்பினர்களை தொகுதி வாரியாகத் தெரிவு செய்யவும், 75 பேரை மாவட்ட அடிப்படையில் விகிதாசார முறைப்படி தீர்வு செய்யவும், எஞ்சிய 25 பேரை தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கவும் வகை செய்யும் திருத்த யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால், இந்த யோசனைக்கு 18 சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகள்மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், இன்று அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கூடிய கூட்டத்தின் போதே அந்த புதிய யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, 237 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனை அமைச்சரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த 237 உறுப்பினர்களில், 145 பேர் தொகுதி வாரியாகத் தெரிவு செய்யப்படுவர் என்றும், ஏனையோர் விகிதாசார முறை மற்றும் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அமைச்சரவை அனுமதி கிட்டியுள்ள குறித்த சட்டமூலம் இன்று வர்த்தமானியில் சேர்க்கப்படவுள்ளது.
20வது திருத்தம் தொடர்பில் இன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்- அமைச்சர் ராஜித
20வது திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று அமைச்சரவைக் கூட்டத்தின்போது இதனை தெரிவித்துள்ளார்.
20வது திருத்தம் தொடர்பில் இறுதி வரைபு மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum