Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரணிலை பதவியில் இருந்து நீக்கி விட்டு, 20வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்: இடதுசாரி எம்.பிக்கள்

Go down

ரணிலை பதவியில் இருந்து நீக்கி விட்டு, 20வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்: இடதுசாரி எம்.பிக்கள் Empty ரணிலை பதவியில் இருந்து நீக்கி விட்டு, 20வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்: இடதுசாரி எம்.பிக்கள்

Post by oviya Mon Jun 08, 2015 2:18 pm

புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தும் 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்க இடதுசாரி கட்சிகள் தீர்மானித்துள்ளன.
நடைமுறையில் உள்ள தேர்தல் முறைக்கு பதிலாக தொகுதி மற்றும் விகிதாசார முறை என்பன கலந்த தேர்தல் முறைக்கு தாம் ஆதரவு வழங்குவதாக இடதுசாரி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லங்கா சமசமாஜக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ விதாரண, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டியூ. குணசேகர, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்தனர்.

கொழும்பு பொரள்ள கலாநிதி என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனை கூறினர்.

இந்த ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேராவும் கலந்து கொண்டிருந்தார்.

முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பமாக கருதி 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதாகவும் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அகற்றி விட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தின் கீழ் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum