Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்து மதப்படி ஆத்மா வாழ்நாள் கணக்கு -2

Go down

இந்து மதப்படி ஆத்மா வாழ்நாள்  கணக்கு -2 Empty இந்து மதப்படி ஆத்மா வாழ்நாள் கணக்கு -2

Post by ram1994 Wed Dec 24, 2014 8:45 pm

மேலே உள்ள உதாரணத்தில் இரண்டாவது  ஜென்ம காலத்தில் 10 வருட வாழ்கையை உயிர் பிச்சைப் பெற்று 15 வருட வாழ்க்கையாக ஆக்கி விட்டால் அந்த நீட்டிக்கப்பட்ட ஐந்து வருட காலத்தை அதற்க்கு அடுத்த ஜென்ம வாழ்கையிலோ அல்லது  மூன்று முதல் பதிமூன்றாவது ஜென்ம காலத்தில் ஏதாவது ஒன்றில் கழிக்கப்பட்டு விடும். அது போல ஆறாம்  பிறவி ஜென்ம காலத்து 50  வருட வாழ்கையை உயிர் பிச்சைப் பெற்று 58 என நீட்டி விட்டால் அந்த எட்டு  வருட நீடிக்கப்பட்ட காலம் அதற்க்கு அடுத்த ஜென்ம வாழ்கையிலோ அல்லது எட்டு  முதல் பதிமூன்றாவது ஜென்ம காலத்தில் ஏதாவது ஒன்றில் கழிக்கப்பட்டு விடும். இதைதான் உயிர் பிச்சைத் தருவது என்கிறார்கள். இது நடந்துள்ளது. நடக்கும் என்பதே உண்மை. (படத்தை வரையாமல் வாயால் அவர் விவரித்ததை அனைவறும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் படமாக தந்துள்ளேன்). ஒரு விஷயத்தை கவனியுங்கள். 781 வருட கால வாழ்க்கையில் அமைந்து உள்ள 13 ஜென்ம காலங்களை வகுத்துப் பார்த்தால் 60 .08 என வரும். (படம்- 2 ஐ  பார்க்கவும் ) அதனால்தான் 60 ஆம் வயதில் ஆயுள் விருத்தி தரும் சாந்தி ஹோமம் செய்து கொள்ள வேண்டும் என்பது தோன்றியதாம்.

இந்து மதப்படி ஆத்மா வாழ்நாள்  கணக்கு -2 Two+ed.

ஆத்மாவிற்கு மறு ஜனனம் தரப்படும்போது அது செய்துள்ள பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவை மனிதர்களாக மட்டும் அல்ல மிருகங்களாக, செடி கொடிகளாகப் பிறக்கின்றன. ஒரு விதத்தில் பார்த்தால் மனித வாழ்கை மூன்றில் ஒரு பங்குகூட இருக்காது. இந்த  பிரபஞ்சத்தில் மனிதர்களை விட செடி கொடிகளும், மிருகங்கள், புழு பூச்சிகளே அதிக ஜீவராசிகளாக உள்ளன. ஒவ்வொரு ஜென்ம காலத்திலும் ஒவ்வொரு மகான்கள் மூலம் அப்படி உயிர் பிச்சைக் கிடைத்துக் கொண்டே இருக்குமா என்றால் அது நடக்காது என்றார் அந்தப் பண்டிதர். கடைசி கட்டமான பதிமூன்றாவது ஜென்ம காலப் பிறவியில் ஆயுளை நீட்டிக்கவே முடியாது. ஆகவே உயிர் பிச்சை என்பது என்பது மனித வாழ்க்கையில் இருக்கும்போதுதான் கிடைக்கும்.  மிருகம் மற்றும் செடி கொடிகளின் ஆயுளில் கிடைக்காது.

இந்து மதப்படி ஆத்மா வாழ்நாள்  கணக்கு -2 Untitled.

அது சரி. பல ரிஷி முனிவர்கள் மீண்டும் பிறப்பு எடுக்காத நிலைக்கு சென்று விடுகிறார்களே. அப்படி என்றால் அந்த 13 ஜென்ம காலம்  என்ற விதி சரியாக உள்ளதாக தோன்றவில்லையே என்று கேட்டதற்கு அவர் கூறினார் ' இந்தக் கேள்வி மிக நியாயமான கேள்விதான். 13 ஜென்ம காலம் எடுத்து அனுப்பப்படும் பிறவியில் சிலர் செய்யும் அபார புண்ணியங்கள், யாகங்கள், ஹோமங்களினால் அவர்களுக்கு சிவலோகப் பிராப்தி, வைகுண்டப் பிராப்தி,  மீண்டும் பிறவா நிலை  போன்றவைக் கிடைக்கின்றன. அப்போது சிவலோகப் பிராப்தி, வைகுண்டப் பிராப்தி, மீண்டும் பிறவா நிலை போன்றவைக் கிடைத்த அந்த ஆத்மாக்கள் யம லோகத்தில் இருந்து அந்தந்த லோகங்களுக்கு சென்று அங்கு சேவை செய்தவண்ணம் இருக்கும். அவை மீண்டும் அங்கிருந்து பிரும்ம லோகத்துக்கு பிறப்பு எடுக்க  வருவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஆத்மாக்கள் மிகக் குறைவானவையே '.  

இந்து மதப்படி ஆத்மா வாழ்நாள்  கணக்கு -2 Image6a.
இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் மூன்றில் ஒரு பங்குதான்.
மற்றவை-செடிகொடிகள், புழு, பூச்சிகள், மிருகங்கள் போன்றவை
மீதிப் பகுதியாகும். ஆகவே 13 ஜென்ம காலத்தில்  மிகக் குறைவான
அளவிலேயே மனித ஜென்மத்தை ஒரு ஆத்மா எடுக்கும்

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum