Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழகத்தின் முதலமைச்சராக 5வது முறையாக பதவியேற்றார் ஜெயலலிதா: காரில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

Go down

தமிழகத்தின் முதலமைச்சராக 5வது முறையாக பதவியேற்றார் ஜெயலலிதா: காரில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி! Empty தமிழகத்தின் முதலமைச்சராக 5வது முறையாக பதவியேற்றார் ஜெயலலிதா: காரில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

Post by oviya Sat May 23, 2015 1:36 pm

ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன், அவரது காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டு தேசியக் கொடி பொருத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் இணைப்பு:

பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்ட போது ஜெயலலிதாவின் காரில் அதிமுக கொடி பறந்தது.

ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்த உடனேயே ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரது காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றி விட்டு தேசியக் கொடியை பொருத்தினர்.



இரண்டாம் இணைப்பு:

தமிழகத்தின் முதலமைச்சராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று காலை 11.09 மணியளவில் பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இதையடுத்து, மொத்தமுள்ள 28 அமைச்சர்கள் 14, 14 பேராக பதவி பிரமாணத்தை எடுத்துகொண்டுள்ளனர்.

உழைப்பாளர் சிலை அருகே நான்கு பெரிய திரைகள்

அதிமுக தொண்டர்கள் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியைக் காண்பதற்காக உழைப்பாளர் சிலை அருகே நான்கு பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் நடக்கும் நிகழ்வுகளை பொதுமக்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் இணைப்பு:

ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு காலை 10.30 மணியளவில் புறப்படுகிறார்.

இந்த பதவி ஏற்பு விழாவுக்காக, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

விழாவில், முதலமைச்சராக ஜெயலலிதாவுக்கு, கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

ஜெயலலிதாவை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பதவி ஏற்க உள்ளனர்.

இந்த விழாவிற்காக சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.

மேலும், ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பதை கொண்டாடும் விதமாக அதிமுக தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்துள்ளதால் அண்ணாசாலை, பல்லவன் சாலை போன்ற பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பிரபலங்கள் பங்கேற்பு:

இந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். இதற்காக விழா மண்டபத்துக்கு ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார்.

நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான சரத்குமார், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் சிவக்குமார், கார்த்திக் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சசிகலா மற்றும் உறவினர்கள், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என். சீனிவாசன், மதுரை ஆதீனம் உள்ளிட்ட பலர் பதவி ஏற்புவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசியக் கொடிக்கு பதிலாக சிங்கள கொடி!– கண்டி தலதாமாளிகையில் பதற்றம்!
» தமிழகத்தின் வெள்ளத்திற்கு என்ன காரணம்? முதல்வர் ஜெயலலிதா அறிக்கை
» தீர்க்க தரிசனத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்டது : வேட்பாளர் சி.சிறீதரன்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச வளங்களை பயன்படுத்துகிறது: கபே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum