Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா பதவியேற்க தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி: வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்!

Go down

ஜெயலலிதா பதவியேற்க தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி: வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்! Empty ஜெயலலிதா பதவியேற்க தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி: வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்!

Post by oviya Thu May 21, 2015 1:56 pm

ஜெயலலிதா பதவியேற்க தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி விடுதலை செய்த நிலையில், அந்த தீர்ப்பில் கணக்கில் பிழை இருப்பதாகவும், எனவே தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தமிழக கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ரவிராஜ் குருராஜ் குல்கர்னி என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இன்று அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேணுகோபால கவுடா, வீரப்பா ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த வழக்கு விளம்பர நோக்கில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதாக கூறி தள்ளுபடி செய்ததோடு, அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே, தமிழக முதல்வராக ஜெயலலிதா வரும் 23ம் திகதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேமுதிக மனு

ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் விடுதலையானதை அடுத்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வரும் 23ம் திகதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தனது மனுவில், ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் குளறுபடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமது மனுவை விசாரித்து முடிக்கும் வரை ஜெயலலிதா பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும் கீழமை நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளித்த தீர்ப்பு சரியா அல்லது ஜெயலலிதாவை விடுதலை செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பு சரியா என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum