Top posting users this month
No user |
வாக்குறுதியை நிறைவேற்றிய மைத்திரி: 37 தமிழக மீனவர்கள் விடுதலை
Page 1 of 1
வாக்குறுதியை நிறைவேற்றிய மைத்திரி: 37 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 37 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜாவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் கடந்த ஏப்ரல் 3ம் திகதி நாகப்பட்டினத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடற்படை மேற்கொண்ட விசாரனைக்கு பின் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இராமேஸ்வர மீனவ பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த மீனவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இவர்கள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் தங்களது ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவு, தமிழக மீனவர்களின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருந்த மீனவர்களின் உறவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
குறித்த மீனவர்கள் இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜாவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் கடந்த ஏப்ரல் 3ம் திகதி நாகப்பட்டினத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடற்படை மேற்கொண்ட விசாரனைக்கு பின் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இராமேஸ்வர மீனவ பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த மீனவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இவர்கள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் தங்களது ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவு, தமிழக மீனவர்களின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருந்த மீனவர்களின் உறவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum