Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சனிப்பெயர்ச்சி முடிந்த முதல் சனிக்கிழமை திருநள்ளாறில் 2 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

Go down

சனிப்பெயர்ச்சி முடிந்த முதல் சனிக்கிழமை திருநள்ளாறில் 2 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்  Empty சனிப்பெயர்ச்சி முடிந்த முதல் சனிக்கிழமை திருநள்ளாறில் 2 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

Post by oviya Tue Dec 23, 2014 1:45 pm

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் கடந்த 16–ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. 10 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சனிப்பெயர்ச்சி முடிந்து 45 நாட்கள் வரை சனீஸ்வர பகவானை வழிபட்டால் சனிபெயர்ச்சியன்று தரிசனம் செய்தால் கிடைக்கும் பலனை பெறலாம் என்பது ஐதீகம் ஆகும்.
இதையொட்டி சனிப்பெயர்ச்சி முடிந்து முதல் சனிக்கிழமையான இன்று திருநள்ளாறுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நள தீர்த்த குளத்தில் புதிய நீர் நிரப்பப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இன்று அதிகாலை கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. திருநள்ளாறுக்கு பக்தர்கள் வாகனத்தில் வந்து குவிந்தார்கள். அவர்கள் வரிசையாக நள தீர்த்த குளத்திற்கு அனுப்பப்பட்டனர். குளத்தில் அவர்கள் எண்ணை தேய்த்து குளித்தார்கள்.

இதையடுத்து அருகே உள்ள நள தீர்த்த விநாயகர் கோவிலில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டனர். பின்னர் சனீஸ்வர பகவான் சன்னதிக்கு சென்று சாமி கும்பிட்டார்கள். திருநள்ளாறில் இன்று 2 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.

புதுவை கவர்னர் ஏ.கே.சிங் இன்று காலை 6.15 மணிக்கு திருநள்ளாறு வந்தார். தட்சணாமூர்த்தி, விநாயகர், முருகன் மற்றும் தர்பராண்யேஸ்வரர் சாமியை வழிபட்டார். பின்னர் தில தீபம் ஏற்றி சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தார். சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 7.45 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum