Top posting users this month
No user |
65 இலங்கை அகதிகள் நாளை இந்தியாவிலிருந்து வருகை
Page 1 of 1
65 இலங்கை அகதிகள் நாளை இந்தியாவிலிருந்து வருகை
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற 65 இலங்கையர்கள் நாளை மீண்டும் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அகதி முகாம்களில் பல வருடங்களாக வாழ்ந்தவர்களே இவ்வாறு நாளை நாடு திரும்பவுள்ளனர் என மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இரண்டு விமானங்களில் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இவர்கள் தமது சொந்த இடங்களிலேயே குடியமர்த்தப்படவுள்ளார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்களில் இந்தியாவில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அகதி முகாம்களில் பல வருடங்களாக வாழ்ந்தவர்களே இவ்வாறு நாளை நாடு திரும்பவுள்ளனர் என மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இரண்டு விமானங்களில் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இவர்கள் தமது சொந்த இடங்களிலேயே குடியமர்த்தப்படவுள்ளார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்களில் இந்தியாவில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum