Top posting users this month
No user |
Similar topics
கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு- மின்னல் தாக்கி இளைஞன் பலி
Page 1 of 1
கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு- மின்னல் தாக்கி இளைஞன் பலி
கிளிநொச்சி வன்னேரிக்குளம் சோலைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இச்சடலம் தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி, வன்னேரிக்குளம் சோலை பகுதியில் ஆண் ஒருவரின் சடலத்தினை கண்டெடுத்துள்ளோம்.
குறித்த சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதனால் மூன்று நாட்களுக்கு முன்னர் இவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.
இந்தக் காட்டுப்பகுதிக்குச் சென்றவர்கள் சிலர் சடலத்தை கண்டு எமக்கு தெரியப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட போது முன்று பிள்ளைகளின் தந்தையான நா.பரமேஸ்வரன்(48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் என தெரியவந்தது.
இதேவேளை பொதுமக்களால் சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்ட இருவரையும் தாம் கைது செய்துள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மின்னல் தாக்கி இளைஞன் பலி!
மினுவங்கொட, கலவான பிரதேசத்தில் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கணனியை பயன்படுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மினுவங்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இடியுடன் கூடிய அதிக மழையின் போது மின்சார பொருட்களை கையாள்வது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இச்சடலம் தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி, வன்னேரிக்குளம் சோலை பகுதியில் ஆண் ஒருவரின் சடலத்தினை கண்டெடுத்துள்ளோம்.
குறித்த சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதனால் மூன்று நாட்களுக்கு முன்னர் இவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.
இந்தக் காட்டுப்பகுதிக்குச் சென்றவர்கள் சிலர் சடலத்தை கண்டு எமக்கு தெரியப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட போது முன்று பிள்ளைகளின் தந்தையான நா.பரமேஸ்வரன்(48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் என தெரியவந்தது.
இதேவேளை பொதுமக்களால் சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்ட இருவரையும் தாம் கைது செய்துள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மின்னல் தாக்கி இளைஞன் பலி!
மினுவங்கொட, கலவான பிரதேசத்தில் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கணனியை பயன்படுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மினுவங்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இடியுடன் கூடிய அதிக மழையின் போது மின்சார பொருட்களை கையாள்வது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மன்னார் - இலுப்பக்கடவையில் ஆணின் சடலம் மீட்பு
» மட்டக்களப்பு வாவியில் ஆணின் சடலம் மீட்பு
» பழுகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
» மட்டக்களப்பு வாவியில் ஆணின் சடலம் மீட்பு
» பழுகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum