Top posting users this month
No user |
எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் குருணாகல் கூட்டம் நடத்தப்படும்!- பிரசன்ன ரணதுங்க
Page 1 of 1
எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் குருணாகல் கூட்டம் நடத்தப்படும்!- பிரசன்ன ரணதுங்க
எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் குருணாகலில் நடத்தப்படவுள்ள கூட்டம் நடத்தப்படும் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தனை பெயரிட வேண்டுமெனக் கோரி நாட்டின் பல பகுதிகளிலும் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
எந்தவொரு அரசியல் காரணிகள் தேவைகளுக்காக இந்தக் கூட்டம் நிறுத்தப்பட மாட்டாது.
கடந்த கூட்டங்களை விடவும் அதிகளவானவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென பிரசன்ன ரணதுங்க கோரியுள்ளார்.
குருணாகலில் நாளை நடைபெறவுள்ள கூட்டம் குறித்து சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மைத்திரி- மஹிந்த சந்திப்பின் முதல் அனுகூலம்: மஹிந்தவின் குருநாகல் கூட்டம் ரத்து
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக குருநாகலில் நடைபெறவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டம் நாளை நடத்தப்படவிருந்தது.
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் ஏற்பாட்டில் இந்தக்கூட்டம் நடத்தப்படவிருந்தது.
ஏற்கனவே கொழும்பிலும் கண்டியிலும் இவ்வாறான கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் குருநாகல் கூட்டத்தை நடத்துவதில்லை என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மஹிந்த தரப்பினர் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தனை பெயரிட வேண்டுமெனக் கோரி நாட்டின் பல பகுதிகளிலும் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
எந்தவொரு அரசியல் காரணிகள் தேவைகளுக்காக இந்தக் கூட்டம் நிறுத்தப்பட மாட்டாது.
கடந்த கூட்டங்களை விடவும் அதிகளவானவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென பிரசன்ன ரணதுங்க கோரியுள்ளார்.
குருணாகலில் நாளை நடைபெறவுள்ள கூட்டம் குறித்து சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மைத்திரி- மஹிந்த சந்திப்பின் முதல் அனுகூலம்: மஹிந்தவின் குருநாகல் கூட்டம் ரத்து
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக குருநாகலில் நடைபெறவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டம் நாளை நடத்தப்படவிருந்தது.
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் ஏற்பாட்டில் இந்தக்கூட்டம் நடத்தப்படவிருந்தது.
ஏற்கனவே கொழும்பிலும் கண்டியிலும் இவ்வாறான கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் குருநாகல் கூட்டத்தை நடத்துவதில்லை என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மஹிந்த தரப்பினர் அறிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum