Top posting users this month
No user |
அரசியலமைப்புச் சபையை குழப்பும் முயற்சியில் மகிந்த கும்பல்
Page 1 of 1
அரசியலமைப்புச் சபையை குழப்பும் முயற்சியில் மகிந்த கும்பல்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற தமது கட்சி ஆதரவு வழங்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும் விமல், தினேஷ், வாசு,கம்மன்பில் ஆகிய அரசியல் அனாதைகளும், சுதந்திரக் கட்சியில் உள்ள மகிந்த ஆதரவு கும்பலும் இதனை குழப்பும் சதித்திட்ட முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எந்த விதத்திலாவது 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு விடுமாயின் மகிந்த ராஜபக்ச ஆதரவு கும்பல் அரசியலமைப்புச் சபையை சீர்குலைக்கும் சூழ்ச்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக விமல், தினேஷ், வாசு, கம்மன்பில கும்பலும் சுதந்திரக் கட்சியில் உள்ள மகிந்த ஆதரவு கும்பலும் ஜீ.எல்.பீரிஸ் வீட்டில் கூடி கலந்துரையாடியுள்ளது.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படுவதுடன் அரசியலமைப்புச் சபை அதிகாரமிக்கதாக மாறும்.
அரசியலமைப்புச் சபையில், ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் அவர்கள் பரிந்துரைக்கும் புத்திஜீவிகளும் அங்கம் வகிப்பர். இவர்கள் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பர்.
இவ்வாறான சூழ்நிலையில், அரசியலமைப்புச் சபையில் புத்திஜீவிகளுக்கான உறுப்புரிமையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு அழுத்தம் கொடுக்க மகிந்த ஆதரவு கும்பல் முயற்சித்து வருகிறது.
இதன் மூலம் நியமிக்கப்பட உள்ள சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை சீர்குலைக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை சீர்குலைத்து 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை கிடைக்கவிடாமல் செய்து, அவர்களின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற வஞ்சகமான நடவடிக்கைகளில் இந்த கும்பல் ஈடுபட்டு வருகிறது.
நாட்டுக்கு என்ன நடந்தாலும் இவர்களுக்கு பாரவாயில்லை. மகிந்தவின் தோளில் ஏறி அடுத்த ஆறு வருடங்களுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என்பது மாத்திரமே இவர்களின் நோக்கம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் விமல், தினேஷ், வாசு,கம்மன்பில் ஆகிய அரசியல் அனாதைகளும், சுதந்திரக் கட்சியில் உள்ள மகிந்த ஆதரவு கும்பலும் இதனை குழப்பும் சதித்திட்ட முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எந்த விதத்திலாவது 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு விடுமாயின் மகிந்த ராஜபக்ச ஆதரவு கும்பல் அரசியலமைப்புச் சபையை சீர்குலைக்கும் சூழ்ச்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக விமல், தினேஷ், வாசு, கம்மன்பில கும்பலும் சுதந்திரக் கட்சியில் உள்ள மகிந்த ஆதரவு கும்பலும் ஜீ.எல்.பீரிஸ் வீட்டில் கூடி கலந்துரையாடியுள்ளது.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படுவதுடன் அரசியலமைப்புச் சபை அதிகாரமிக்கதாக மாறும்.
அரசியலமைப்புச் சபையில், ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் அவர்கள் பரிந்துரைக்கும் புத்திஜீவிகளும் அங்கம் வகிப்பர். இவர்கள் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பர்.
இவ்வாறான சூழ்நிலையில், அரசியலமைப்புச் சபையில் புத்திஜீவிகளுக்கான உறுப்புரிமையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு அழுத்தம் கொடுக்க மகிந்த ஆதரவு கும்பல் முயற்சித்து வருகிறது.
இதன் மூலம் நியமிக்கப்பட உள்ள சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை சீர்குலைக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை சீர்குலைத்து 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை கிடைக்கவிடாமல் செய்து, அவர்களின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற வஞ்சகமான நடவடிக்கைகளில் இந்த கும்பல் ஈடுபட்டு வருகிறது.
நாட்டுக்கு என்ன நடந்தாலும் இவர்களுக்கு பாரவாயில்லை. மகிந்தவின் தோளில் ஏறி அடுத்த ஆறு வருடங்களுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என்பது மாத்திரமே இவர்களின் நோக்கம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum