Top posting users this month
No user |
காணாமல் போனோர் தொடர்பில் விசேட விசாரணை அவசியம்: மெக்ஸ்வெல் பரணகம
Page 1 of 1
காணாமல் போனோர் தொடர்பில் விசேட விசாரணை அவசியம்: மெக்ஸ்வெல் பரணகம
இலங்கையில் உள்ளூர் யுத்தத்தின் போது இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் விசேட விசாரணை அவசியமென காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் குருக்கள் மடம் படுகொலை, கிழக்கு பல்கலைக்கழகப் படுகொலை, சத்துருகொண்டான் படுகொலை ஆகியவற்றுக்கு முழுமையான விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் முன்வைத்த இடைக்கால அறிக்கையில் மேற்கண்ட பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதியின் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக் குழுவில், இராணுவத்தினருக்கு எதிராக ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதனால் இதை பற்றி விசாரணை செய்ய தனி குழு அமைக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.
காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அனுமதியும் ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார் .
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் குருக்கள் மடம் படுகொலை, கிழக்கு பல்கலைக்கழகப் படுகொலை, சத்துருகொண்டான் படுகொலை ஆகியவற்றுக்கு முழுமையான விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் முன்வைத்த இடைக்கால அறிக்கையில் மேற்கண்ட பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதியின் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக் குழுவில், இராணுவத்தினருக்கு எதிராக ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதனால் இதை பற்றி விசாரணை செய்ய தனி குழு அமைக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.
காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அனுமதியும் ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார் .
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum