Top posting users this month
No user |
ஆந்திர துப்பாக்கி சூடு: பலியான 6 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை
Page 1 of 1
ஆந்திர துப்பாக்கி சூடு: பலியான 6 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை
ஆந்திராவில் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஆறு தொழிலாளர்களின் உடல்கள் நேற்று மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
ஆந்திர துப்பாக்கி சூட்டில் 20 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், இவர்களில் வேட்டகிரிபாளையம் கிராமம் சசிக்குமார், முருகன், பெருமாள், காந்தி நகர் கிராமம் மகேந்திரன், முருகாப்பாடி கிராமம் முனுசாமி, மூர்த்தி ஆகிய 6 பேரது உடல்கள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருவண் ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ம் திகதி பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
இந்நிலையில் ஆறு குடும்பத்தினரும் மறு பிரேத பரிசோதனை நடத்தக் கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், 6 தொழி லாளர்களின் உடல்களை உஸ்மானியா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் மறு பிரேதப் பரிசோதனை செய்து, அதன் அறிக்கையை மூடி முத்திரையிட்டு வரும் 20ம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதையடுத்து உஸ்மானியா பல்கலைக்கழக சிறப்பு மருத்துவர்கள் தக்யுதீன்கான், அபிஜித் சுபேதர் மற்றும் ரமணமூர்த்தி ஆகிய 3 பேர் அடங்கிய மருத்துவக் குழு நேற்று மறு பிரேத பரிசோதனை செய்ததுடன், அதனை வீடியோவாக பதிவும் செய்யப்பட்டது.
ஆந்திர துப்பாக்கி சூட்டில் 20 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், இவர்களில் வேட்டகிரிபாளையம் கிராமம் சசிக்குமார், முருகன், பெருமாள், காந்தி நகர் கிராமம் மகேந்திரன், முருகாப்பாடி கிராமம் முனுசாமி, மூர்த்தி ஆகிய 6 பேரது உடல்கள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருவண் ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ம் திகதி பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
இந்நிலையில் ஆறு குடும்பத்தினரும் மறு பிரேத பரிசோதனை நடத்தக் கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், 6 தொழி லாளர்களின் உடல்களை உஸ்மானியா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் மறு பிரேதப் பரிசோதனை செய்து, அதன் அறிக்கையை மூடி முத்திரையிட்டு வரும் 20ம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதையடுத்து உஸ்மானியா பல்கலைக்கழக சிறப்பு மருத்துவர்கள் தக்யுதீன்கான், அபிஜித் சுபேதர் மற்றும் ரமணமூர்த்தி ஆகிய 3 பேர் அடங்கிய மருத்துவக் குழு நேற்று மறு பிரேத பரிசோதனை செய்ததுடன், அதனை வீடியோவாக பதிவும் செய்யப்பட்டது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum