Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


19ஆவது திருத்தம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகளுக்கிடையில் இணக்கம்!

Go down

19ஆவது திருத்தம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகளுக்கிடையில் இணக்கம்! Empty 19ஆவது திருத்தம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகளுக்கிடையில் இணக்கம்!

Post by oviya Sun Apr 19, 2015 3:22 pm

19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மீதான விவாதத்தை எதிர்வரும் 21ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் நடத்துவது என அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கடையிலான கூட்டத்தில், இந்த இணக்கப்பாடு காணப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

19வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நாடாளுமன்ற குறிப்பேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற பரிந்துரைகளுக்கு அமைவான திருத்தச் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை நாடாளுமன்றம் நாளை காலை 9.30 மணிக்கு கூடி, நாளை மறுதினம் வரை ஒத்திவைக்கப்படவுள்ளது.

இந்த காலத்திற்குள் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமான ஆவணம் முழுமையாக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்.

இதன் பின்னர் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

19ஆம் திருத்த சட்டத்திற்கு ஜே.வி.பி ஆதரவு: ரில்வின் சில்வா

அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கப்படும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும், நல்ல விடயங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்திற்காக 19ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும், எனினும் இது தொடர்பில் பல விதமான சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட வேண்டுமென்றே இவ் திருத்த சட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் சொந்த நோக்கங்களைப் புறந்தள்ளி, மக்களின் நோக்கங்களை நிறைவேற்ற 19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என தான் கோரிக்கை விடுப்பதாகவும் ரில்வின் சில்வா இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum