Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இரத்தினபுரி கூட்டத்தில் 10 லட்சம் மக்களும்,300 மக்கள் பிரதிநிதிகளும் பங்குகொள்வார்கள்: பிரசன்ன நம்பிக்கை

Go down

இரத்தினபுரி கூட்டத்தில் 10 லட்சம் மக்களும்,300 மக்கள் பிரதிநிதிகளும் பங்குகொள்வார்கள்: பிரசன்ன நம்பிக்கை Empty இரத்தினபுரி கூட்டத்தில் 10 லட்சம் மக்களும்,300 மக்கள் பிரதிநிதிகளும் பங்குகொள்வார்கள்: பிரசன்ன நம்பிக்கை

Post by oviya Wed Mar 25, 2015 12:48 pm

மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோரி இரத்தினபுரியில் நாளை நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 300 மக்கள் பிரதிநிதிகளையும், 10 லட்சம் மக்களையும் அழைத்து வரப் போவதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று அரும்பாடு பட்டுவரும் விமல் வீரவன்ஸ உள்ளிட்ட குழுவினர், நுகேகொடையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சுமார் 15 ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட போதிலும் அந்த கூட்டத்தில் 5 இலட்சம் மக்கள் கலந்து கொண்டதாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

கண்டியில் நடைபெற்ற கூட்டத்திற்கு 10 இலட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறிய போதிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை அவர்களால் அழைத்து வர முடியவில்லை. அத்துடன் இந்த கூட்டத்தில் சுதந்திரக் கட்சியை சேர்ந்த 100 மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தாலும் சுமார் 10 பேர் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், வெளிநாடு சென்றுள்ள மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இன்று நாடு திரும்பவுள்ளதாகவும், இரத்தினபுரி சீவலி விளையாட்டு மைதானத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் தான் கலந்து கொள்ள போவதாகவும் கூறியுள்ளார்.

தான் மாத்திரம் தனியாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை எனவும் 40 மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளை சேர்ந்த 300 உறுப்பினர்கள் தன்னுடன் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum