Top posting users this month
No user |
மோடியின் இலங்கை வருகையை தமிழ் கட்சிகள் சாதகமாக்கி கொள்ள வேண்டும்: ஆனந்த சங்கரி
Page 1 of 1
மோடியின் இலங்கை வருகையை தமிழ் கட்சிகள் சாதகமாக்கி கொள்ள வேண்டும்: ஆனந்த சங்கரி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வை பெற்று தரும் புதிய திருப்புமுனையாகும்.
தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு முடியாமல் பல தடைகள் ஏற்பட்டதை நாம் பலரும் அறிந்ததொரு விடயம்.
எனினும் இன்று தென்னிலங்கை அரசியற் கட்சிகளிடையே ஏற்பட்ட மாற்றமும், இலங்கை மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்ட ஆட்சி மாற்றமும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதில் மேலும் வல சேர்த்துள்ளது.
இந்திய பிரதமரின் வருகையானது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தகுந்த சந்தர்ப்பம் என்பதுடன்,தமிழ்க் கட்சிகள் ஒரே குரலில் பேசி ஒரு நிலையான தீர்வை எட்டுவதற்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்பதால் இதை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் சுஷ்மா ஸ்வராஜின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு நான் அழைப்பு விடுகிறேன் எனவும்,
அவருடன் இணைந்து ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும், காலாகாலமாக புறக்கணிக்கப்பட்டுவரும் மலையக தமிழர்களின் தலைமைகளையும் ஒன்றுசேர்த்து இந்த அரிய சந்தர்ப்பத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள, இணைந்து செயற்பட அழைப்பை விடுப்பதுடன் கூட்டாக இணைந்து செயற்பட்டு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாகவும் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும், இந்திய அரசின் ஆர்வத்தையும் சாதகமாக்கி, எமது ஒற்றுமையை வழங்கி நிரந்தர தீர்வைக் காண அனைவரும் முன்வருவதுடன், இந்த சந்தர்ப்பத்தையும் நழுவவிடாது, பயன்படுத்தி கொள்வோம் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் கேட்டு கொண்டுள்ளோர்.
தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு முடியாமல் பல தடைகள் ஏற்பட்டதை நாம் பலரும் அறிந்ததொரு விடயம்.
எனினும் இன்று தென்னிலங்கை அரசியற் கட்சிகளிடையே ஏற்பட்ட மாற்றமும், இலங்கை மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்ட ஆட்சி மாற்றமும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதில் மேலும் வல சேர்த்துள்ளது.
இந்திய பிரதமரின் வருகையானது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தகுந்த சந்தர்ப்பம் என்பதுடன்,தமிழ்க் கட்சிகள் ஒரே குரலில் பேசி ஒரு நிலையான தீர்வை எட்டுவதற்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்பதால் இதை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் சுஷ்மா ஸ்வராஜின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு நான் அழைப்பு விடுகிறேன் எனவும்,
அவருடன் இணைந்து ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும், காலாகாலமாக புறக்கணிக்கப்பட்டுவரும் மலையக தமிழர்களின் தலைமைகளையும் ஒன்றுசேர்த்து இந்த அரிய சந்தர்ப்பத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள, இணைந்து செயற்பட அழைப்பை விடுப்பதுடன் கூட்டாக இணைந்து செயற்பட்டு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாகவும் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும், இந்திய அரசின் ஆர்வத்தையும் சாதகமாக்கி, எமது ஒற்றுமையை வழங்கி நிரந்தர தீர்வைக் காண அனைவரும் முன்வருவதுடன், இந்த சந்தர்ப்பத்தையும் நழுவவிடாது, பயன்படுத்தி கொள்வோம் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் கேட்டு கொண்டுள்ளோர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum