Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தேசிய அரசாங்கத்தை எதிர்க்கிறார் வெல்கம - 19வது அரசியலமைப்பு சட்டமூலம்: நாளை இறுதி தீர்மானம்

Go down

தேசிய அரசாங்கத்தை எதிர்க்கிறார் வெல்கம - 19வது அரசியலமைப்பு சட்டமூலம்: நாளை இறுதி தீர்மானம் Empty தேசிய அரசாங்கத்தை எதிர்க்கிறார் வெல்கம - 19வது அரசியலமைப்பு சட்டமூலம்: நாளை இறுதி தீர்மானம்

Post by oviya Tue Mar 10, 2015 1:38 pm

தேசிய அரசாங்கம் அமையப்பெறுமானால் தான் எதிர்கட்சி ஆசனத்தில் அமரப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சி, ஐக்கிய தேசிய கட்சிகளின் தேசிய அரசாங்கத்தை உருவாக்குதல் தொடர்பான யோசனையை தான் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்ததாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்திலும் தெளிவாக கூறியதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

19வது அரசியலமைப்பு சட்டமூலம்: நாளை இறுதி தீர்மானம்

19வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சமர்பித்தல் தொடர்பில் நாளை இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இச்சட்டமூலத்தை அமுல்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளையும் நாளை மறுதினமும் தேசிய நிறைவேற்று சபையில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப் படுத்தல், அரசமைப்பின் 17 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல் உட்பட முக்கிய சில சரத்துகளடங்கிய அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பிலேயே தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்ட வரைவு ஜனாதிபதிக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், அரசியலமைப்பு மறுசீரமைப்புக் குழுவும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தேசிய நிறைவேற்றுச் சபையில் இதற்கு அனுமதி கிடைத்ததும், எதிர்வரும் 24ம் திகதி நாடாளுமன்றில் அவசர சட்டமூலமாகச் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

தேர்தல் முறைமையில் மாற்றம், அரசியலமைப்பின் 18வது திருத்தச்சட்டத்தை இரத்துச் செய்தல் உள்ளிட்ட விடயங்களும் புதிய சட்டவரைவில் உள்ளடக்கப்படவுள்ளன.

17வது அரசியலமைப்பின்படி, புதிய சில ஆணைக்குழுக்களும் அமைக்கப்படவுள்ளன.

மேலும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதும் 19வது திருத்த சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum