Top posting users this month
No user |
Similar topics
கண்டி பேரணியை புறக்கணிக்க அவுஸ்திரேலியா சென்ற மேல் மாகாண முதலமைச்சர்!
Page 1 of 1
கண்டி பேரணியை புறக்கணிக்க அவுஸ்திரேலியா சென்ற மேல் மாகாண முதலமைச்சர்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனக் கோரி கண்டியில் நாளைய தினம் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ள நிலையில், மகிந்தவின் ஆதரவாளரான மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க திடீரென வெளிநாடு சென்றுள்ளார்.
நுகேகொடையில் கடந்த மாதம் நடைபெற்ற மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் பிரசன்ன ரணதுங்க, பல மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், பிரசன்ன ரணதுங்க நேற்றிரவு அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மூன்று வார விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள முதலமைச்சர் ஒரு வாரத்திலேயே நாடு திரும்பவுள்ளதாகவும் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வரும் நோக்கில் பிற கட்சிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அதன் அங்கத்தவர்களுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், கண்டியில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டே மேல் மாகாண முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை கண்டியில் நடைபெறும் கூட்டத்தி்ல் தான் கலந்து கொள்ள போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் முனுகமவின் மகன் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் கடந்த மாதம் நடைபெற்ற மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் பிரசன்ன ரணதுங்க, பல மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், பிரசன்ன ரணதுங்க நேற்றிரவு அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மூன்று வார விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள முதலமைச்சர் ஒரு வாரத்திலேயே நாடு திரும்பவுள்ளதாகவும் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வரும் நோக்கில் பிற கட்சிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அதன் அங்கத்தவர்களுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், கண்டியில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டே மேல் மாகாண முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை கண்டியில் நடைபெறும் கூட்டத்தி்ல் தான் கலந்து கொள்ள போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் முனுகமவின் மகன் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மேல் மாகாண முதலமைச்சர் பதவிக்காக பலர் போட்டி
» அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரின் யாழ் விஜயம்!: முதலமைச்சர் உட்பட பலருடன் பேச்சுவார்த்தை
» மேல் மாகாண முதலமைச்சரின் பதவி பறி போகுமா?
» அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரின் யாழ் விஜயம்!: முதலமைச்சர் உட்பட பலருடன் பேச்சுவார்த்தை
» மேல் மாகாண முதலமைச்சரின் பதவி பறி போகுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum