Top posting users this month
No user |
Similar topics
பலகோடி செலவில் ஒலுவில் துறைமுகம்: மக்களுக்கு பயனில்லை
Page 1 of 1
பலகோடி செலவில் ஒலுவில் துறைமுகம்: மக்களுக்கு பயனில்லை
பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட ஒலுவில் வர்த்தக துறைமுகத்தை இயங்கச்செய்வதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் காணிகளை சுவீகரித்தும், அங்குள்ள மீனவர்களின் தொழிலிடங்களை கைப்பற்றியும் இத்துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது.
எனினும் தற்போது இத்துறைமுகம் புற்கள் வளர்ந்து காடாக மாறி வருவதுடன், கட்டிடங்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் சேதமடையும் நிலையும் உருவாகியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒலுவில் துறைமுகம் வர்த்தகம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இருவேறு துறைமுகப்பகுதிகளை கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை துறைமுக அதிகார சட்டப்பிரிவு வழங்கும் அதிகாரத்தின் கீழ் இத்துறைமுகம் அமைக்கப்படுவதாக 1988ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்தே கடந்த 2008ம் ஆண்டு ஜுலை மாதம் ஒலுவில் துறைமுகத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இத்துறைமுகத்தின் நிர்மாண பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் டென்மார்க்கிடமிருந்து 46.1 மில்லியன் யூரோக்களை வட்டியில்லா கடனாக பெற்றது, இது தற்போதைய இலங்கை ரூபாப்படி 800 கோடிக்கும் அதிகமான தொகையாகும்.
அத்துடன் துறைமுகம் திறக்கப்பட்டு 10 வருடத்திற்குள் இக்கடன் தொகையை செலுத்த வேண்டும் என்பது டென்மார்க் அரசாங்கத்தின் நிபந்தனையாகும்.
இந்நிலையிலேயே கடந்த 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இத்துறைமுகம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்துறைமுக திறப்பின் பின்னர் மீன்பிடி துறைமுகம் செயற்பட தொடங்கிய போதிலும் இதுவரை வர்த்தக துறைமுகத்தின் செயற்பாடுகள் எவையும் ஆரம்பிக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஒலுவில் துறைமுகம் திறக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஏற்றுமதி அதிகரிப்பதோடு, 1000 நேரடியான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் எனவும், 2015ம் ஆண்டளவில் சுமார் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் அரச ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
எனினும் தற்போது இவ்வர்த்தகதுறைமுகத்தில் 28 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 52 ஊழியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
அத்துடன் இத்துறைமுக நிர்மாணப் பணிகளுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் சிலருக்கு இதுவரையில் எவ்விதமான நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் ஒலுவில் துறைமுகம் திறக்கப்பட்டு, ஒன்றரை வருடம் நிறைவடையவுள்ள நிலையில் தமது எதிர்பார்ப்புகள் ஒருவீதம் கூட நிறைவேற்றப்படாமை தம்மை பெரிதும் பாதித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஒலுவில் துறைமுகத்தை பிரதான துறைமுகமாக மாற்றியமைப்பேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்தார்.
அத்துடன் கடந்த சனிக்கிழமை துறைமுகம் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அங்குள்ள நிலவரங்களை குறித்த துறைமுகத்தின் நடவடிக்கைகளை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் காணிகளை சுவீகரித்தும், அங்குள்ள மீனவர்களின் தொழிலிடங்களை கைப்பற்றியும் இத்துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது.
எனினும் தற்போது இத்துறைமுகம் புற்கள் வளர்ந்து காடாக மாறி வருவதுடன், கட்டிடங்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் சேதமடையும் நிலையும் உருவாகியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒலுவில் துறைமுகம் வர்த்தகம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இருவேறு துறைமுகப்பகுதிகளை கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை துறைமுக அதிகார சட்டப்பிரிவு வழங்கும் அதிகாரத்தின் கீழ் இத்துறைமுகம் அமைக்கப்படுவதாக 1988ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்தே கடந்த 2008ம் ஆண்டு ஜுலை மாதம் ஒலுவில் துறைமுகத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இத்துறைமுகத்தின் நிர்மாண பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் டென்மார்க்கிடமிருந்து 46.1 மில்லியன் யூரோக்களை வட்டியில்லா கடனாக பெற்றது, இது தற்போதைய இலங்கை ரூபாப்படி 800 கோடிக்கும் அதிகமான தொகையாகும்.
அத்துடன் துறைமுகம் திறக்கப்பட்டு 10 வருடத்திற்குள் இக்கடன் தொகையை செலுத்த வேண்டும் என்பது டென்மார்க் அரசாங்கத்தின் நிபந்தனையாகும்.
இந்நிலையிலேயே கடந்த 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இத்துறைமுகம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்துறைமுக திறப்பின் பின்னர் மீன்பிடி துறைமுகம் செயற்பட தொடங்கிய போதிலும் இதுவரை வர்த்தக துறைமுகத்தின் செயற்பாடுகள் எவையும் ஆரம்பிக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஒலுவில் துறைமுகம் திறக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஏற்றுமதி அதிகரிப்பதோடு, 1000 நேரடியான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் எனவும், 2015ம் ஆண்டளவில் சுமார் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் அரச ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
எனினும் தற்போது இவ்வர்த்தகதுறைமுகத்தில் 28 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 52 ஊழியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
அத்துடன் இத்துறைமுக நிர்மாணப் பணிகளுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் சிலருக்கு இதுவரையில் எவ்விதமான நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் ஒலுவில் துறைமுகம் திறக்கப்பட்டு, ஒன்றரை வருடம் நிறைவடையவுள்ள நிலையில் தமது எதிர்பார்ப்புகள் ஒருவீதம் கூட நிறைவேற்றப்படாமை தம்மை பெரிதும் பாதித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஒலுவில் துறைமுகத்தை பிரதான துறைமுகமாக மாற்றியமைப்பேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்தார்.
அத்துடன் கடந்த சனிக்கிழமை துறைமுகம் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அங்குள்ள நிலவரங்களை குறித்த துறைமுகத்தின் நடவடிக்கைகளை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அடிபணிந்த எதிர்க்கட்சியால் நாட்டுக்கு பயனில்லை: உதய கம்மன்பில
» மஹிந்தவின் வீண் செலவுகளால் பலகோடி ரூபாய் நஸ்டம்! சம்பிக்க
» ஹம்பாந்தோட்டை துறைமுக செலவுகளை கொழும்பு துறைமுகம் ஏற்க இடமளிக்க முடியாது: அர்ஜுன
» மஹிந்தவின் வீண் செலவுகளால் பலகோடி ரூபாய் நஸ்டம்! சம்பிக்க
» ஹம்பாந்தோட்டை துறைமுக செலவுகளை கொழும்பு துறைமுகம் ஏற்க இடமளிக்க முடியாது: அர்ஜுன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum