Top posting users this month
No user |
94 பாராளுமன்ற உறுப்பினர்கள் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெறவில்லை
Page 1 of 1
94 பாராளுமன்ற உறுப்பினர்கள் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெறவில்லை
அரச சேவையில் சாதாரண துப்புரவு தொழிலாளியாக இணைவதற்கு க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற வேண்டும் எனினும் நாட்டை ஆளும் 94 பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதாரண தர பரீட்சையில் சித்தி பெறவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இது எந்தவிதத்தில் நியாயமாகும் என அக்கட்சி கேள்வியெழுப்பியுள்ளதுடன், எத்தனோல், ஹெரோயின் வியாபாரிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை பாராளுமன்றத்திற்கு உள்வாங்கும் கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 உறுப்பினர்கள் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்கள் எனவும், 142 உறுப்பினர்களில் உயர்தரம் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்லாதவர்கள் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரண தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள மக்களின் நிதி, நிர்வாகம், அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை உருவாக்கும் இடத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இந்நிலைமைக்கு நாட்டு மக்கள் தான் காரணம் எனவும், எதிர்காலத்தில் இந்நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
படித்தவர்கள் மாத்திரமே அரசியலில் சாதிக்க முடியும் என்பது எனது கருத்தல்ல, பண்பாளர்கள், மக்கள் மீதும் நாட்டின் மீதும் அன்பு கொண்டவர்கள், அரசியல் சதுரங்கத்தில் சாணக்கியர்கள், அவ்வாறானவர்களே நாட்டை நிர்வகிக்க வேண்டும் என்பதே எனது கருத்து என அவர் குறிப்பிட்டார்.
எனவே எதிர்வரும் தேர்தல்களில் புதிய மாற்றங்களுக்கு மக்கள் அடித்தளம் அமைக்க வேண்டும் என மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரண தெரிவித்துள்ளார்.
இது எந்தவிதத்தில் நியாயமாகும் என அக்கட்சி கேள்வியெழுப்பியுள்ளதுடன், எத்தனோல், ஹெரோயின் வியாபாரிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை பாராளுமன்றத்திற்கு உள்வாங்கும் கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 உறுப்பினர்கள் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்கள் எனவும், 142 உறுப்பினர்களில் உயர்தரம் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்லாதவர்கள் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரண தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள மக்களின் நிதி, நிர்வாகம், அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை உருவாக்கும் இடத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இந்நிலைமைக்கு நாட்டு மக்கள் தான் காரணம் எனவும், எதிர்காலத்தில் இந்நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
படித்தவர்கள் மாத்திரமே அரசியலில் சாதிக்க முடியும் என்பது எனது கருத்தல்ல, பண்பாளர்கள், மக்கள் மீதும் நாட்டின் மீதும் அன்பு கொண்டவர்கள், அரசியல் சதுரங்கத்தில் சாணக்கியர்கள், அவ்வாறானவர்களே நாட்டை நிர்வகிக்க வேண்டும் என்பதே எனது கருத்து என அவர் குறிப்பிட்டார்.
எனவே எதிர்வரும் தேர்தல்களில் புதிய மாற்றங்களுக்கு மக்கள் அடித்தளம் அமைக்க வேண்டும் என மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரண தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum