Top posting users this month
No user |
பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம்: 28 பேர் தற்காலிகமாக இடம்பெயர்வு
Page 1 of 1
பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம்: 28 பேர் தற்காலிகமாக இடம்பெயர்வு
பொகவந்தலாவ பகுதியில் நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக கொட்டியாகலை தோட்டப் பிரிவில் ஆற்றுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் ஒரு அடி உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ டின்சின் பகுதியிலுள்ள ஒரு மைதானமும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மரக்கறி தோட்டமும் முழுமையாக வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தற்போது வெள்ள நீர் வடிந்தோடியுள்ளதாகவும் குடியிருப்புக்களுக்கும் மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தனா்.
எனினும் இந்த குடியிருப்பில் உள்ள 12 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.
நுவரெலியா மாவட்ட செயலாளா் டீ.பீ.ஜீ.குமாரசிரியின் உத்தரவின்படி அம்பகமுவ பிரதேச சபையும் தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து இவா்களுக்கு உணவு உடமைகளை வழங்கி வருகின்றனா்.
பொகவந்தலாவ டின்சின் பகுதியிலுள்ள ஒரு மைதானமும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மரக்கறி தோட்டமும் முழுமையாக வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தற்போது வெள்ள நீர் வடிந்தோடியுள்ளதாகவும் குடியிருப்புக்களுக்கும் மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தனா்.
எனினும் இந்த குடியிருப்பில் உள்ள 12 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.
நுவரெலியா மாவட்ட செயலாளா் டீ.பீ.ஜீ.குமாரசிரியின் உத்தரவின்படி அம்பகமுவ பிரதேச சபையும் தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து இவா்களுக்கு உணவு உடமைகளை வழங்கி வருகின்றனா்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum